சென்னையில் பகீர்! பிறந்தநாள் பார்டியில் சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் - 2 பேர் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அந்த சிறுமியின் தோழி மற்றும் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 9, 2024, 04:00 PM IST
  • சென்னையில் நடந்த கொடுமை
  • பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை
  • பிறந்த நாள் பார்ட்டியில் கொடூரம்
சென்னையில் பகீர்! பிறந்தநாள் பார்டியில் சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் - 2 பேர் கைது title=

சென்னையில் சிறுமியை பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்து அவரை நண்பர்களுக்கு பெண் ஒருவர் விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் 18 வயதான பெண், அவரது நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த புகாரை சென்னை பெரவல்லூரைச் சேர்ந்த சிறுமியின் தாயார் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். 

அந்த புகாரில், " தனது 15 வயது மகள் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு அகிரா(18) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இதனால், கடந்த மாதம் அகிராவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக தனது மகள் விருகம்பாக்கத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அகிரா அழைப்பின் பேரில் எனது மகள் அங்கு சென்றார். அப்போது அவரது நண்பர்கள் வில்லியம்ஸ்(21) மற்றும் சோமேஸ் (20) ஆகியோர் இந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு வந்துள்ளனர். அப்போது, அகிரா எனது மகளுக்கு குளிர்பானம் கொடுக்க, அதனை அவள் வாங்கி குடித்திருக்கிறார். அந்த குளிர் பானத்தை குடித்தவுடன் தனது மகள் மயங்கியுள்ளார்.

மேலும் படிக்க | அதிமுக தோற்றதால் தனது காலை கிழித்து கொண்ட தொண்டர்! 

இதையடுத்து அகிராவுடன் வந்த நண்பர்கள் இருவரும் தனது மகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளனர். பின்னர் மூன்று நாட்கள் அகிராவின் வீட்டில் எனது மகள் தங்கியிருந்ததுடன், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என அவர்கள் மிரட்டியுள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் சீண்டல் கொடுத்தது உறுதியானது,

இதனையடுத்து, அகிரா மற்றும் அவரது நண்பர் சோமேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வில்லியம்ஸ் என்பவரை தேடி வருகின்றனர். பிறந்தநாள் விழாவிற்கு வந்த தோழிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நண்பர்கள் பாலியல் சீண்டல் கொடுத்த சம்பவத்தில் பெண் தோழி உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | சென்னையில் புதுக்கடை.. 9 ரூபாய்க்கு 3 ஆடைகள், கடையில் குவிந்த மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News