நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் - திமுக பேச்சாளருக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென திமுக பேச்சாளர் சைதை சாதிக்கிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 26, 2022, 01:13 PM IST
  • சைதை சாதிக் நடிகைகளை ஆபாசமாக பேசியிருந்தார்
  • அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம்
  • நடிகைகளிடம் மன்னிப்பு கேட்க உத்தரவு
நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் - திமுக பேச்சாளருக்கு நீதிமன்றம் உத்தரவு title=

அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் அண்மையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக நிர்வாகியான சைதை சாதிக் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, பாஜக உறுப்பினர்கள் கௌதமி, நமிதா ஆகியோர் பற்றி ஆபாசமாக பேசினார். அவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் அவரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதாகி விடுதலையானார். 

இந்தச் சூழலில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஓயப்போவதில்லை என்று அறிவித்த குஷ்பூ கடந்த 4ஆம் தேதி டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் சைதை சாதிக்கின் பேச்சுக்கான வீடியோ ஆதாரத்தையும் இணைத்து கொடுத்தார். மேலும் அந்தப் புகாரில் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார்.

இதற்கிடையே சைதை சாதிக்கின் ஆபாசு பேச்சுக்கு எதிராக அவர் மீது காவல் துறையில் புகாரும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தன்னை கைது செய்யக்கூடாது என முன் ஜாமீன் வழக்கு தாக்கல் செய்தார் சைதை சாதிக்.

மேலும் படிக்க | நகைக்கடையில் கொள்ளை : நகைகளை சூறையாடிய திருட்டு கும்பல்!

அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெகதீஷ் சந்திரா, பெண்கள் பற்றி இனி அப்படி பேச மாட்டேன் என நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அதுவரை சாதிக்கை கைது செய்ய வேண்டாமென அறிவுறுத்தினார்.

முன்னதாக மகளிர் ஆணையத்தில் புகாரளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த குஷ்பூ, “நிச்சயமாக எந்த நல்ல ஆணும் பெண்களை இப்படி பேசமாட்டார்.. எனக்கே இந்த கதி என்றால் மற்ற பெண்களுக்கு தமிழகத்தில் என்ன கதி ஏற்படும்? அமைச்சர் பொறுப்பில் இருக்கும் மனோ தங்கராஜ் தூங்கி விழித்து 4 நாள்கள் கழித்து நான் விளம்பரம் தேடுவதாக கூறியிருக்கிறார். அதை கேட்டதும் சிரிப்புதான் வந்தது. எனக்கு இனி விளம்பரம் தேவையில்லை. 

நானும், அவரும் பொது வெளியில் நின்றால் அவரை எத்தனை பேருக்கு அடையாளம் தெரியும்? அவருக்குத்தான் இப்போது விளம்பரம் தேவை. அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில்தான் இவ்வளவு அநாகரீகமாக பேசியுள்ளனர். அதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்த அமைச்சர் தனியாக அழைத்து கண்டித்ததாக கூறுகிறார். உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இப்படி விமர்சித்து விட்டு தனியாக அழைத்து கண்டித்தால் ஏற்பீர்களா?  என்னிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனக்கு மன்னிப்பும் தேவையில்லை. நடவடிக்கைதான் தேவை” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News