ஜுன் 1 முதல் தனியார் பால்களின் விலை உயருகிறது

ஜுன் 1ம் தேதி முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. 

Last Updated : May 29, 2019, 02:25 PM IST
ஜுன் 1 முதல் தனியார் பால்களின் விலை உயருகிறது title=

ஜுன் 1ம் தேதி முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. 

தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனமும் 5 தனியார் பால் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. ஹட்சன் ஹெரிட்டாஷ், டோட்லா, ஜெசி, திருமலா போன்ற ஆந்திர மாநில பால் நிறுவனங்களும் போட்டி போட்டு பால் வினியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 குறைவாக விற்கப்படுகிறது. 

இந்த நிலையில் தனியார் பால் விலை ஜுன் 1ம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. ஆரோக்கியா மற்றும் ஹட்சன் பால் விலை மட்டும் உயருகின்றன. 

Trending News