தமிழகத்தின் சில பகுதிகளில் இந்த வார இறுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!

தென் தமிழகத்தின் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு(IMD) மையம் தெரிவித்துள்ளது.

Last Updated : Jun 23, 2020, 12:33 PM IST
  • இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவல்கள் படி வரும் ஜூன் 25 மற்றும் ஜூன் 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்.
  • அடுத்த 24 மணி நேரம் பொறுத்தவரையில் தெற்கு தமிழகத்தின் சில பகுதிகள், அருகிலுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலன செயல்பாடு காரணமாக மழை பெறக்கூடும்.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் உள்துறை மாவட்டங்கள் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிகப்பட்டுள்ளது.
  • குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் சில பகுதிகளில் இந்த வார இறுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு! title=

தென் தமிழகத்தின் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு(IMD) மையம் தெரிவித்துள்ளது.

அதேப்போல் வங்காள விரிகுடாவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் சூறாவளி சுழற்சி காரணமாக, இந்த வார இறுதியில் வடக்கு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ | தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவல்கள் படி வரும் ஜூன் 25 மற்றும் ஜூன் 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரம் பொறுத்தவரையில் தெற்கு தமிழகத்தின் சில பகுதிகள், அருகிலுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலன செயல்பாடு காரணமாக மழை பெறக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் உள்துறை மாவட்டங்கள் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிகப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை மற்றும் சோலையாறு பகுதிகளில் திங்களன்று 6 செ.மீ மழை பெய்தது, அதைத் தொடர்ந்து சின்னக்கல்லர் மற்றும் சின்கோனா (கோயம்புத்தூர் மாவட்டம்) 5 செ.மீ மழை பெற்றது. வால்பாறை (கோயம்புத்தூர் மாவட்டம்) மற்றும் தேவலாவில் (நீலகிரி) தலா 4 செ.மீ மழை பெய்தது, தேவகோட்டை (சிவகங்கை), திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லி (திருவள்ளூர்) பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பெய்தது என IMD தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்பநிலையை பொறுத்தவைரயில் திருத்தனி திங்களன்று மிக உயர்ந்த வெப்பநிலை (40.6 டிகிரி செல்ஸியஸ்), நாகப்பட்டினம் (39.6 டிகிரி செல்ஸியஸ்) பதிவு செய்தது. தூத்துக்குடி, வேலூர், பரங்கிப்பேட்டை, மதுரை, ஈரோடு மற்றும் சென்னை ஆகியவை திங்களன்று 38 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலையை பதிவு செய்தன.

சென்னையைப் பொருத்தவரை, வானத்தின் நிலை பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ | தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது..

இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை காரணமாக வடக்கு கேரளாவில் தொடர்ந்து அதிக மழை பெய்து வருகிறது. வடகரை (கோழிக்கோடு), தலசேரி மற்றும் கண்ணூர் (கண்ணூர்) ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை அதிக மழை பெய்தது. தலிபரம்பா (கண்ணூர்), கொய்லாண்டி (கோழிக்கோடு) ஆகிய இடங்களிலும் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. தெற்கு கேரளாவில், வைகோம் மற்றும் காஞ்சிரப்பள்ளி (கோட்டயம்), செர்த்தலா (ஆலப்புழா) ஆகியவற்றில் அதிக மழை பெய்தது. தோடுபுழா (இடுக்கி) பகுதியில் மிதமான மழை பெய்தது.

Trending News