சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பு!

Last Updated : Oct 2, 2017, 10:46 AM IST
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பு! title=

மேட்டூர் அணையின் நீர் சம்பா சாகுபடிக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. 

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வறட்சி காரணமாக குறைந்துகொண்டே வந்தநிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிரித்ததால் அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. 

இந்நிலையில் இன்று பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது!

Trending News