இனிப்பில் மயக்க மருந்து... துரோகியாகிய தோழி: சென்னையில் பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை

Crime News: 15 வயது பள்ளி மாணவிக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை குற்றம் செய்த சினிமா ஆடை வடிவமைப்பாளர் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 10, 2024, 12:57 PM IST
  • நட்பாக பழகி சிறுமியை ஏமாற்றிய இளம் பெண்.
  • காதலனுடன் சேர்ந்து சதி வேலை.
  • சென்னையில் நடந்த பகீர் சம்பவம்.
இனிப்பில் மயக்க மருந்து... துரோகியாகிய தோழி: சென்னையில் பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை title=

சென்னை: 15 வயது பள்ளி மாணவிக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட ஆடை வடிவமைப்பாளர் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பகீர் சம்பவம் குறித்து இங்கே காணலாம்.

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி தனது நண்பர்களுடன் அண்ணா நகரில் உள்ள ஒரு கஃபேவிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்படி சென்ற போது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கஃபேவில் ஒரு இளம் பெண்ணுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

நாளடைவில் அந்த இளம் பெண் சிறுமியிடம் நட்பாக பழகி வந்த நிலையில் இளம் பெண் தன்னுடைய பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சிறுமியை அழைத்தார். அப்போது சிறுமி சாலிகிராமத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக சென்றதாகவும், அங்கு இளம்பெண் இரண்டு ஆண் நண்பர்களுடன் இருந்ததாகவும் தெரிகிறது.

பின்னர் இளம்பெண் சிறுமியை வற்புறுத்தி இனிப்பு ஒன்றை கொடுத்ததாகவும் அந்த இனிப்பை சாப்பிட்டவுடன் சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டதால் தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. தண்ணீர் கொடுப்பதாக கூறி ஒரு அறைக்குள் சிறுமியை பூட்டிவிட்டு  அந்த இளம்பெண் தப்பி சென்றுள்ளார். பின்னர் இளம்பெண்ணுடன் வந்த இரண்டு ஆண் நண்பர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகின்றது.  

மேலும் படிக்க | அதிமுக தோற்றதால் தனது காலை கிழித்து கொண்ட தொண்டர்!

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி காலையில் எழுந்து இது குறித்து இளம்பெண்ணிடம் கேட்டபோது, அந்த கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இரண்டு நாட்கள் கழித்து நடந்த சம்பவம் தொடர்பாக தனது சகோதரியிடம் தெரிவித்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக காண்பித்த போது பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக சிறுமியின் பெற்றோர் இது குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியை பிறந்தநாள் நிகழ்ச்சி என ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது பெருங்களத்தூரையை சேர்ந்த பிரதிக்சா அகிரா என்பதும், இவர் சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. பிறந்தநாளின் போது அகிராவின் காதலன் சோமேஷிற்கு விருந்தளிக்க சிறுமியை அகிரா அழைத்து சென்றார் என்ற பகீர் உண்மையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அகிரா வீட்டில் காதலன் சோமேஷ் மற்றும் அவரது நண்பன்  வில்லியம்ஸ் ஆகியோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் செல்போன் எண்ணை வைத்து இளம்பெண் பிரதிக்சா அகிரா மற்றும் வடபழனியை சேர்ந்த கல்லூரி மாணவரான சோமேஷ் என்ற சோமசுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தலைமுறைவாக இருந்து வரும் வில்லியம்ஸ் என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | வரலாற்று சாதனை படைத்த எம்.பிக்களை வாழ்த்தி, அறிவுரை சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News