சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு நன்றி - கமல்ஹாசன்!

கஜா புயலை எதிர்கொள்வதில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்!

Last Updated : Nov 16, 2018, 05:05 PM IST
சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு நன்றி - கமல்ஹாசன்! title=

கஜா புயலை எதிர்கொள்வதில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்!

இதுகுறித்து கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.

அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத்தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் @maiamofficial களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Trending News