கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு: காவலாளியை கொன்றவர் கைது

Last Updated : Jun 6, 2017, 10:50 AM IST
கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு: காவலாளியை கொன்றவர் கைது title=

கொடநாடு காவலாளி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான் இன்று கைது செய்யப் பட்டார்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். 

இச்சம்பவம் தொடர்பாக சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதில் தொடர்புடைய 11 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த கனகராஜ் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது நண்பரும், 2-வது குற்றவாளியுமான சயான் ஏப்ரல் 29-ம் தேதி கார் விபத்தில் படுகாயமடைந்தார். 

இதன் காரணமாக கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.  

அவரை போலீசார் தற்போது கோத்தக்கிரிக்கு அழைத்து செல்கின்றனர். மேலும் அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News