திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது!

சுதாகரன் மற்றும் சிறுமியை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இரு குடும்பத்தினர் முன்னிலையில் விசாரணை நடத்ததில் இருவரும் உடலுறவில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 17, 2022, 01:26 PM IST
திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது! title=

கோவை மாவட்டம் காளப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதாகரன்(வயது 21). இவர் சோமையம்பாளையம் பஞ்சாயத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கும் 10வகுப்பு படிக்கும் சிறுமிக்கும்(வயது 14) பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதியன்று கோவிலுக்கு சென்று வருகிறேன் என்று தன் பெற்றோர்களிடம் கூறி விட்டு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பாத நிலையில், நேற்று சுதாகரனின் சகோதரர் சிறுமியின் உறவினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிறுமி எங்கள் வீட்டில் தான் இருக்கிறார் என கூறியுள்ளார்.

இதனையடுத்து சுதாகரன் மற்றும் சிறுமியை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இரு குடும்பத்தினர் முன்னிலையில் விசாரணை நடத்ததில் இருவரும் உடலுறவில் ஈடுப்பட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து  சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் சுதாகரன் மீது போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News