கணவனின் செல்போனை பார்த்த மனைவி! பறிபோன வாழ்க்கை! என்ன நடந்தது?

திருமணம் ஆகியும் பல பெண்களுடன் தனது கணவருக்கு தொடர்பு இருப்பதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Dec 12, 2023, 04:30 PM IST
  • கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.
  • செல்போனை பார்த்த போது அதிர்ச்சி.
  • காவல்துறையில் புகார் செய்த மனைவி.
கணவனின் செல்போனை பார்த்த மனைவி! பறிபோன வாழ்க்கை! என்ன நடந்தது? title=

தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை மறைத்து திருமணம் செய்துக்கொண்டதாக பெண் ஒருவர் பல ஆதாரங்களுடன் டிஜஜி அலுவலகத்தில் புகார் அளித்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.  கணவரின் மன்மத லீலைகளை மனைவி கண்டுபிடித்தது எப்படி? என்ன நடந்தது என்பதை காணலாம். 
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த பெண் ஒருவர் மேட்ரிமோனியில் மணமகன் தேடியுள்ளார். அப்போது அவருக்கு ஏற்றார் போல தஞ்சாவூர் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த விவேக்ராஜ் என்பவர் இருந்துள்ளார். அதன்பிறகு வீட்டில் பேசி இருவருக்கும் கடந்த ஜூன் 6ம் தேதி திருமணம் நடந்துள்ளது. விவேக்ராஜ் பல்வேறு வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். 

மேலும் படிக்க - ஈரோடு: காதல் திருமணம் செய்த இளம் பெண் இறப்பு - கணவர் குடும்பத்தார் மீது சந்தேகம்?

திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து, சென்னையில் விவேக்ராஜின் அக்கா வீட்டிற்க்கு சென்று திரும்பியுள்ளனர். அப்போது அக்கா வீட்டில் எடுத்த போட்டோக்களை தனது போனுக்கு அனுப்ப விவேக்ராஜுன் போனை ஆர்த்தி எடுத்துள்ளார். அப்போது, விவேக்ராஜ் பல பெண்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள், நிர்வாணமான பல பெண்களுடன் வாட்ஸ் அப்பில் பேசும்போது எடுத்த ஸ்கீர்ன் சாட்டுகள் ஆகியவற்றை பார்த்து ஆர்த்தி அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து விவேக்ராஜிடம், ஆர்த்தி கேட்டுள்ளார். அப்போது தனது போனில் பார்த்த விஷயங்களை வெளியே கூறினால் அவ்வளவுதான் என விவேக்ராஜ் மிரட்டியதாக தெரிகிறது. அதோடு அவரின் பெற்றோரும் விவேக்ராஜுன் மனைவியை மிரட்டியுள்ளனர். இதையெல்லாம் விட கொடுமை ஒன்றும் நடந்துள்ளது. ஒருமுறை கர்ப்பமான தனது மனைவியை அடித்தே கருவை விவேக்ராஜ் சிதைத்துள்ளார்.  

இது தொடர்பாக ஆர்த்தி கடந்த மாதம் 27-ம் தேதி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்.பி.,யின் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் முறையாக இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.  இதனால் மனமுடைந்த அவர் நேற்று, தஞ்சாவூர் டி.ஐ.ஜி., அலுவலகத்தில், தனது வழக்கறிஞருடன் வந்து விவேக்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். விவேக்ராஜ் செய்த லீலைகளை தனது போனில் ஆதரமாக வைத்துள்ளார் அவரது மனைவி. தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, பல பெண்களின் ஆபாச படங்களை போனில் வைத்துள்ள விவேக்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க - மாமியாரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மருமகள்! அதிர்ச்சிப் பின்னணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News