வீடியோ கான்பரன்சிங்கில் பதிலளிக்க சசிகலாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Last Updated : May 9, 2019, 09:42 PM IST
வீடியோ கான்பரன்சிங்கில் பதிலளிக்க சசிகலாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி! title=

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு உபகரணம் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலவாணி மோசடி வழக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை எழுப்பூர் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடன் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்திய செலவாணி மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் நேரடியாக ஆஜராக முடியாமல் போனது.

இதற்கிடையில் அந்நிய செலவாணி மோசடி வழக்கில் நீதிபதிகள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வரும் 13-ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கில் இதுவரை சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் பற்றி சசிகலாவிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் இதேபோன்று நீதிபதியின் கேள்விக்கு பதிலளிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் இந்த ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக சசிகலாவுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதிவு செய்யப்படும் பதில்கள் அடங்கிய ஆவணங்களை, பெங்களூரு சிறைக்கு அனுப்பி சசிகலாவின் கையெழுத்தை பெறவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending News