ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முன்னால் நீதிபதி குரல்

Last Updated : Jan 18, 2017, 01:42 PM IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முன்னால் நீதிபதி குரல் title=

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், உச்சநீதி மன்ற முன்னால் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 

டுவிட்டரில் கூறியதாவது:-

“தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என பதிவிட்டுள்ளார்.

 

 

 

மார்கண்டேய கட்ஜு தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News