உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க DMK அஞ்சுகிறது - பழனிசாமி தாக்கு!!

தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் என தமிழக முதலவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Dec 9, 2019, 08:12 AM IST
    1. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயங்குகிறது, அஞ்சுகிறது.
    2. உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுவிட்டு மீண்டும் நீதிமன்றம் செல்கிறார் ஸ்டாலின்; தேர்தலை எப்படியாவது தள்ளிப்போடுவது தான் ஸ்டாலினின் திட்டம்.
    3. தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும்
    4. வரத்து குறைவால் வெங்காய விலை உயர்வு பிரச்னை நாடு முழுவதும் உள்ளது.
    5. உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்.
    6. அதிமுக கூட்டணி ஒன்றாக சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெறும்.
உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க DMK அஞ்சுகிறது - பழனிசாமி தாக்கு!! title=

தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் என தமிழக முதலவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

உள்ளாட்சி தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது என்பதை, தமிழக மக்களுக்கு ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார். தேர்தலை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலின் பயப்படுகிறார் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்.......... “இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்து தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது. எந்த மாவட்டத்தில் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஆட்சேபனை இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுவிட்டு தற்போது மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக ஸ்டாலின் கூறுகிறார்.

உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிபோகிறது என்பதை ஸ்டாலின் தெளிவு படுத்திவிட்டார். தேர்தலை தள்ளிப்போடுவதே ஸ்டாலினின் நோக்கம். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது. தேர்தலை எதிர்கொள்ள தெம்பு, திராணி இருக்கிறதா என நாங்கள் தற்போது திமுகவைப் பார்த்து கேட்கிறோம்.

தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்டதாக மூன்று ஆண்டுகளாக ஸ்டாலின் கூறிக்கொண்டு இருக்கிறார். மக்களிடம் விஷமத்தனமாக கருத்துகளை பரப்பி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார். ஆனால் அவரது முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றியை பெறும்” என்று கூறினார்.

மேலும், அண்டை மாநிலங்களில் மழை பாதிப்பால் விளைச்சல் குறைந்து, வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாகக் கூறிய முதலமைச்சர், தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் 15 லிருந்து 20 நாட்களுக்குள் சந்தைக்கு வரும் என்பதால் அதன் விலை குறையும் என்றார்.  

 

Trending News