கோவையில் மாநகராட்சி அலுவலகம் முன் திமுக ஆர்ப்பாட்டம்!

கோவையில் திமுகவி-னர் காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்!

Last Updated : Jun 19, 2019, 12:32 PM IST
கோவையில் மாநகராட்சி அலுவலகம் முன் திமுக ஆர்ப்பாட்டம்! title=

கோவையில் திமுகவி-னர் காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. 

சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் கோவையில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். எனினும் காவல்துறை தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து தடையை மீறி திமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர், காலி குடங்களுடன் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

Trending News