கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல்!

தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்!

Last Updated : Nov 29, 2018, 06:30 PM IST
கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல்! title=

தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்!

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல் நல குறைவு காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் 7-ஆம் நாள் தனியார் மருத்துவமனையில் மறைந்தார். 

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அவரது நினைவாக அன்னாரது சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள சிலை திறப்பு விழாவில் தான் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக சோனியா காந்தி அவர்கள் முக ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதத்தினை திமுக வெளியிட்டுள்ளது.

இந்த பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது...

"தலைவர் கலைஞர் அவர்களின் சிலை திறப்புவிழாவில் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் பங்கேற்பு"

கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு எழுதியுள்ள கடித நகல்:

Trending News