பயிர் சேதங்களை கண்காணிக்க அமைச்சர்கள் குழு: முதலமைச்சர் அறிவிப்பு!

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 11, 2021, 01:50 PM IST
  • மழை நீரில் பயிர்கள் மூழ்கியதால் ,உணவு பயிர்கள் யாவும் அழுகிய நிலையை அடைந்து விளைச்சல் கடுமையான பாதிப்பினை அடைந்துள்ளது.
  • மழை வெள்ளதால் பாதிப்பு அடைந்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்கள் பார்வையிட்டு அறிக்கை அளிக்க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பயிர் சேதங்களை கண்காணிக்க அமைச்சர்கள் குழு: முதலமைச்சர் அறிவிப்பு!  title=

கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக தமிழ்நாடே தத்தளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில், அதுவும் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள்
மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.  மழை நீரில் பயிர்கள் மூழ்கியதால் ,உணவு பயிர்கள் யாவும் அழுகிய நிலையை அடைந்து விளைச்சல் கடுமையான பாதிப்பினை அடைந்துள்ளது. இதனால் விவாசாயிகளுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. 

ALSO READ சென்னையில் எப்போது நிற்கும் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

இதனையடுத்து ,மழை வெள்ளதால் பாதிப்பு அடைந்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்கள் குறித்து பார்வையிட்டு அறிக்கை அளிக்க கோரி அமைச்சர்கள் குழுவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இது குறித்து ஆய்வு செய்து, தற்போது பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் பயிர் சேத விவரங்களை பற்றி அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தலைமையில் அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று உத்தரவிட்டுள்ளார்கள். 

crop

நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் திரு. எஸ்ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் துறை சிவ வி.மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  மேலும் இந்தக் குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திட ஏதுவாக அறிக்கை அளிக்க அவர்களை அறிவுறுத்தியுள்ளார்.

ALSO READ இல்லம் தேடி கல்வி: தன்னார்வலர்கள் தேர்வு, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News