பா.சிதம்பரம் குடும்பத்தார், நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களின் குடும்பத்தார் வரும் ஆகஸ்ட் 20-ஆம் நாள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Last Updated : Jul 30, 2018, 05:59 PM IST
பா.சிதம்பரம் குடும்பத்தார், நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! title=

முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களின் குடும்பத்தார் வரும் ஆகஸ்ட் 20-ஆம் நாள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் சொத்துக்கள் வாங்கியிருப்பதாகவும், அவர்கள் வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கணக்கில் காட்டாதது குறித்து விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. 

இந்த நோட்டிஸுக்கு பா.சிதம்பரம் அவர்களின் குடும்பத்தினர் விளக்கம் அளித்தனர். எனினும் சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி, கார்த்தி, ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராகச் கருப்புப் பணத் தடுப்புச்சட்டத்தின் கீழ் சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி மலர்விழி, மூவரையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமாய் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. இன்றைய விசாரணையில் நளினி, கார்த்திக், ஸ்ரீநிதி ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 

இதனையடுத்து வரும் ஆகஸ்டு 20-ஆம் நாள் சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகிய மூவரும் சென்னை எழும்பூர் நீதிமன்றதில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

Trending News