இரவு நேரங்களில் அலட்சியம் காட்டும் அன்னூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.!

Annur Government Staffs Negligence : இரவு நேரங்களில் அன்னூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியத்தால் அவதியுறும் நோயாளிகள்   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 14, 2022, 05:52 PM IST
  • அலட்சியமாக பணிபுரியும் அன்னூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள்
  • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திறக்கப்படாத அவசர சிகிச்சை அறை
  • மருத்துவர் சிகிச்சை அளிப்பதற்குப் பதில் செவிலியர் சிகிச்சை அளிக்கும் வீடியோ
இரவு நேரங்களில் அலட்சியம் காட்டும் அன்னூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.! title=

அரசு ஊழியர்களின் அலட்சியம் தொடர்பான புகார்கள் சொல்லி மாளாதது. இதுதொடர்பாக புகார் அளித்தாலும் பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதே புகார் அளித்தவர்களின் புலம்பலாகும். மற்ற துறைகளைக் காட்டிலும் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் நோயாளிகளுக்கு பெரும் இன்னலைத் தந்து வருகிறது. 

மேலும் படிக்க | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மதுபாட்டில்கள்: வைரலாகும் வீடியோ

கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்காவில் உள்ள அன்னூர், சர்க்கார்சாமக்குளம் என ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவ்விரு ஒன்றியங்களிலும் மொத்தமாக 30 ஊராட்சிகள், இரு பேரூராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசர சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு அன்னூர் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியுள்ளனர். தினந்தோறும் 100 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் இரவு நேரங்களில் பணிபுரியும் செவிலியர்கள் உட்பட ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்படும் நோயாளிகளை முறையாக கவனிக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று முன்தினம் சாணிப்பவுடர் அருந்திய நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றனர். ஆனால், அவசர சிகிச்சை பிரிவு அறை உட்புறமாக தாளிட்டு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்காததால் நோயாளியை வைத்துக்கொண்டு உறவினர்கள் அவதியுற்றனர். 

வெகுநேரம் கதவைத் தட்டிய பிறகு ஒரு மணி நேரம் கழித்து அவசர சிகிச்சைப் பிரிவு அறை திறக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்பே ஊழியர்கள் கதவைத் திறந்துள்ளனர். அப்போது, இரவு நேரத்தில் பணியில் இருந்த செவிலியர் கோமதி கதவை திறந்துள்ளார். பின்னர்,கதவை திறந்த செவிலியர் கோமதி அப்பெண்மணிக்கு சிகிச்சையளித்துள்ளார். இதனை அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

பொதுவாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகளை அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதே வாடிக்கையாகும். ஆனால், அன்னூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் சிகிச்சை அளித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த வீடியோவில் ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் நீண்ட நேரமாக கதவை தட்டுவது தெளிவாக தெரிகிறது. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் அரசு மருத்துவமனையில் ஊழியர்களின் அலட்சியம் காரணமாக நோயாளிகள் பெரும் அவதியுறுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | ப்ரீ பயர் விளையாட்டால் வந்த வினை: மயக்க நிலையில் சிறுவன் செய்த செயல்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News