மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்னை புறக்கணியுங்கள் - அண்ணாமலை அடாவடி

பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது வேண்டுமென்றால் என்னை புறக்கணித்துக்கொள்ளுங்கள் என அண்ணாமலை கூறியிருக்கிறார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 31, 2022, 04:09 PM IST
  • கோவையில் வழிபாடு செய்தார் அண்ணாமலை
  • சில நாள்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார்
  • மன்னிப்பு கேட்க முடியாதென்றும் அடாவடி பேச்சு
மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்னை புறக்கணியுங்கள் - அண்ணாமலை அடாவடி title=

கடலூரில் சில நாள்களுக்கு முன்பு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் “குரங்குகளைப் போல் ஏன் எங்கு சென்றாலும் தாவித்தாவி வருகிறீர்கள்” என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அவரை புறக்கணிக்க வேண்டுமென்று சமூக வலைதளங்களிலும் பலர் கூறினர்.

இந்நிலையில், கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அங்கு வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கடலூரில் பத்திரிகையாளர்கள் குறித்து தவறாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என சில பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், "பத்திரிகையாளர்களை மரியாதையாக, நேர்மையாக, நியாயமாக 99 சதவீதம் நடத்துகின்றவன் நான். எங்களுக்கு நியாயமான கோபம், சில பத்திரிகையாளர்கள் மீது இருக்கிறது. அவர்கள் தவறான செய்திகளை பதிவிடுவதுதான் அதற்கு காரணம். எனவே, நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். ன் எப்போதும் தவறு செய்யவில்லை. 

மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. என் ரத்தத்தில் அது கிடையாது. தவறு செய்யாதபோது நான் எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அதன்பிறகு, எனது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதும், கலந்துகொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ன் தவறிழைக்காதபோது, மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அண்ணாமலை தவறு செய்துவிட்டதாக நீங்கள் கருதினால், என்னைப் புறக்கணிக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் தவறு செய்யவில்லை, அதனால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” என்று பேசிவிட்டு சென்றார். தற்போது அண்ணாமலையின் இந்தப் பேச்சும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

மேலும் படிக்க | கோவை சம்பவம்... அரசியல் ஆதாயம் தேடும் பாஜக - திருமாவளவன் விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News