தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

Last Updated : Aug 8, 2017, 08:49 AM IST
தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படை சிறைபிடிப்பு title=

நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடலில் மின்பிடிக்கச் சென்றனர். அப்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் 10 படகுகளையும் 32 மீனவர்களையும் சிறை பிடித்துள்ளனர்.

இதேபோல, ஜகதாபட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் 20 பேரும் கைதாகியுள்ளனர் என்றும் அவர்களது 5 படகுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமநாதபுரம், நாகை மாவட்டங்களை சேர்ந்த 32 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Trending News