Covishield: புனேயில் இருந்து சென்னைக்கு 3.60 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

இந்தியாவில், கோவேக்ஸின் (Coavaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield)  ஆகியவை பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவி ஸ்பூட்னிக் வி (Sputnik V)  தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு வருகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 25, 2021, 07:49 AM IST
  • மாநில அரசுகளுக்கு மத்திய அரசே நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் நடைமுறை ஜூன் 21ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • முதல் நாள் அன்றே, 85 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு நாளும் 50 லட்சம், 60 லட்சம் என்ற இலக்குகளை தாண்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Covishield: புனேயில் இருந்து சென்னைக்கு 3.60 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன title=

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் மிக முக்கிய ஆயுதமாக இருப்பது தடுப்பூசி. இந்தியாவில், கோவேக்ஸின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield)  ஆகியவை பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவி ஸ்பூட்னிக் வி (Sputnik V)  தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு வருகிறது

அண்மையில், நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி (PM Narendra Modi), 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்ததோடு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசே நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் எனவும் அறிவித்தார். 

இந்நிலையில், தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணிக்காக, புனேயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்  மூலம் 3 லட்சத்தி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகள்  சென்னையை  வந்தடைந்தன.

தமிழகத்தில் (Tamil Nadu), கொரோனா வைரசுக்கு எதிராக, மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 

ALSO READ | COVID-19 Update: தமிழகத்தில் இன்று 6,162 பேர் பாதிப்பு, 155 பேர் உயிர் இழப்பு

 மாநில அரசுகளுக்கு மத்திய அரசே நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் நடைமுறை ஜூன் 21ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், முதல் நாள் அன்றே, 85 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  அதோடு, ஒவ்வொரு நாளும் 50 லட்சம், 60 லட்சம் என்ற இலக்குகளை தாண்டி வருகிறது குறிப்பிடத்தக்கது. 

வியாழனன்று தமிழ்நாட்டில் 6,162 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,49,577 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 372 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 155 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 31,901 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 49,845 ஆக உள்ளது.

ALSO READ: தட்டம்மை தடுப்பூசி குழந்தைகளை கொரோனாவிலிருந்து காக்குமா; ஆய்வு கூறுவது என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News