தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 59,377 ஆக உயர்வு...

தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக ஒரேநாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டுள்ளது..!

Last Updated : Jun 21, 2020, 08:47 PM IST
தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 59,377 ஆக உயர்வு...  title=

தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக ஒரேநாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டுள்ளது..!

தமிழகத்தில் இன்று மேலும் 2,532 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 52 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எனிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று கொரோனாவால் 1493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் தமிழகத்தின் பிற பகுதிகளில் 1039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது சுமார் 60 சதவீத்ம் பாதிப்பு சென்னையிலும் 40 சதவீத பாதிப்பு தமிழகத்தின் இதர பகுதிகளிலும் உள்ளது. முன்பு சென்னையில் 80 சதவீதமும் பிற பகுதிகளில் 20 சதவீதம் என்ற அளவில் பாதிப்பு இருந்தது. ஆனால் அது சென்னையில் 60 சதவீதம் ஆகவும் பிறபகுதிகளில் 40 சதவீதம் ஆகவும் மாறி உள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு சென்னை தவிரி பிற பகுதிகளில பரவலாக தமிழகத்தில் அதிகரித்திருப்பது உறுதியாகி உள்ளது.

District

C
A
R
D
Chennai
↑1,531
41,172
17,687
↑1,091
22,887
↑42
598
Chengalpattu
↑125
3,745
1,763
↑102
1,933
↑4
49
Thiruvallur
↑120
2,534
1,257
↑63
1,240
↑3
37
Kancheepuram
↑64
1,159
561
↑50
588
 
10
Tiruvannamalai
↑77
1,060
598
↑13
455
↑1
7
Cuddalore
↑102
765
283
 
479
 
3
Madurai
↑69
705
316
↑14
381
 
8
Tirunelveli
↑28
640
208
↑13
428
↑1
4
Viluppuram
↑30
581
181
↑3
390
↑2
10
Thoothukkudi
↑2
577
207
↑7
367
 
3
Vellore
↑88
477
368
↑3
106
 
3
Ranipet
↑2
470
308
↑1
160
 
2
Ariyalur
↑6
420
33
 
387
 
0
Railway Quarantine
↑1
401
210
 
191
 
0
Airport Quarantine
↑8
400
232
↑9
167
 
1
Kallakurichi
↑21
387
86
↑9
301
 
0
Salem
↑12
335
131
↑3
204
 
0
Dindigul
↑27
305
90
↑9
211
 
4
Ramanathapuram
↑30
299
185
↑8
112
 
2
Thanjavur
↑49
272
143
↑4
128
 
1
Coimbatore
↑13
268
103
 
164
 
1
Tiruchirappalli
↑36
266
102
↑15
163
 
1
Tenkasi
↑23
241
133
↑1
108
 
0
Thiruvarur
↑30
218
123
↑15
95
 
0
Virudhunagar
↑13
203
64
↑2
138
 
1
Nagapattinam
↑7
202
135
↓3
67
 
0
Theni
↑7
200
73
↑2
125
 
2
Kanyakumari
↑6
168
71
↑1
96
 
1
Perambalur
 
150
6
 
144
 
0
Tiruppur
↑4
123
7
 
116
 
0
Karur
↑5
115
29
↑1
86
 
0
Namakkal
↑2
94
11
 
82
 
1
Erode
↑7
85
12
 
72
 
1
Sivaganga
↓20
75
25
 
49
 
1
Pudukkottai
↑1
70
37
↑1
32
 
1
Tirupathur
↑2
68
29
 
39
 
0
Krishnagiri
 
63
29
 
32
 
2
Dharmapuri
↑5
35
18
↑1
17
 
0
Nilgiris
↓1
29
15
 
14
 
0
Other State
 
0
-3
 
0
 
3

இன்று சென்னையில் 43 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திருவள்ளூர் மற்றும் விழுப்புரத்தில் தலா 2 பேரும், திருநெல்வேலி மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 37 பேர் அரசு மருத்துவமனையிலும், 16 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 25,863 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

READ | கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான முதல் மருந்து... விரைவில் இந்தியாவில்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் .13 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 49400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதை கடந்த 7043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 வயதுக்கு உட்பட்ட 2934 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending News