தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 23 தமிழக ஆசிரியர்கள் தேர்வு

Last Updated : Aug 31, 2016, 04:27 PM IST
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 23 தமிழக ஆசிரியர்கள் தேர்வு  title=

தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் இந்த தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் தலைமை ஆசிரியர்கள்.

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் இந்த விருது விழா நடைபெறும். அப்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருதுகளை ஆசிரியர்களுக்கு வழங்கி கவுரவிக்க உள்ளார்.

ஆசிரியர் பணியைப் போற்றும் வகையிலும், தேசிய நல்லாசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும் இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம், பாராட்டுச்சான்று ஆகியவற்றுடன் வழங்கப்படுகிறது. 

Trending News