சென்னை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 18 பேர் கைது!!

சென்னையில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 18 பேர் கைது!!

Last Updated : Jul 17, 2018, 12:54 PM IST
சென்னை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 18 பேர் கைது!! title=

சென்னையில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 18 பேர் கைது!!

சென்னையில் அயனாவத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் காத்து கேளாத மாணவிக்கு பாலியல் வன்கொடுமை என அவரது தாய் அளித்த புகாரில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி வசிக்கும் பிளாட்டின் லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை கொலைசெய்து விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டியதால் அந்த சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.

முதலில் 4 காம கொடூரன்களின் இச்சைக்கு பலியான அந்த சிறுமி, அடுத்தடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் காவலாளிகள், பிளம்பர்கள் என அங்கு வேலை பார்க்கும் நபர்களின் பிடியிலும் சிக்கியுள்ளார். சுமார் 7 மாத காலமாக இந்த கொடுமை நீடித்துள்ளது. 

இதையடுத்து, இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய் புகார் செய்துள்ளார். அவர்களைபோக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 13 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Trending News