நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தீக்குளித்த மதிமுக தொண்டர் பலி

நியூட்ரினோ ஆய்வுக்கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதிமுக தொண்டர் இன்று காலமானார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 1, 2018, 01:46 PM IST
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தீக்குளித்த மதிமுக தொண்டர் பலி title=

தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி எடுத்து, இந்திய அரசு நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. 

பாறைகளைக் உடைப்பதால் ஏற்படக்கூடிய அதிர்வுகளால், அருகில் உள்ள கேரளத்தின் இடுக்கி அணையும், தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும்; அணுக்கழிவுகளைக் கொண்டு வந்து இந்த ஆய்வகத்தில் கொட்டுவார்கள்; அமெரிக்காவில் உள்ள பெர்மி ஆய்வுக்கூடத்தில் இருந்து, செயற்கை நியூட்ரான்கள், இந்த ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படும். 

இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து மதுரையில் கடந்த 31-ம் தேதி(நேற்று) மதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் செய்து வந்த மதிமுக தொண்டர்களில் ஒருவரான சிவகாசியை சேர்ந்த ரவி என்பவர் தீக்குளித்தார். 

மதிமுக தொண்டர் தீக்குளித்ததை பார்த்து கண்ணீர் விட்ட வைகோ அவர்கள், தொண்டர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தீக்குளித்த தொண்டரை காப்பாற்றி அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மதிமுக தொண்டர் தொண்டர் காலமானார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending News