திமுக ஸ்ட்ரைக்! சென்னை-ல் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

தூத்துக்குடியில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டை சம்பவத்தை கண்டித்து திமுக தலைமையில் அறவழியில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் இன்று அறிவித்துள்ளன. 

Last Updated : Jun 25, 2020, 10:33 PM IST
திமுக ஸ்ட்ரைக்! சென்னை-ல் பலத்த போலீஸ் பாதுகாப்பு!! title=

தூத்துக்குடியில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டை சம்பவத்தை கண்டித்து திமுக தலைமையில் அறவழியில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் இன்று அறிவித்துள்ளன. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி  100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளதால் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் துப்பாக்கிச் சூடும் , தடியடியும் நடத்தப்பட்டது. இதனால் அரசியல் கட்சிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆட்சியரும், மாவட்ட எஸ்.பி.யும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில்  துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் மெரினா, தலைமை செயலகம், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Trending News