இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம்

Last Updated : Jul 11, 2017, 04:57 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம் title=

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் கோலியுடனான ஆலோசனைக்கு பிறகு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.

இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. 

இதில் 6 பேர் நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய  குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது. 

இந்நிலையில், புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ளே விலகியதை அடுத்து ரவி சாஸ்திரி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Trending News