முதல் பிளே ஆப் சுற்று- வெற்றி யாருக்கு?

Last Updated : May 24, 2016, 04:31 PM IST
முதல் பிளே ஆப் சுற்று- வெற்றி யாருக்கு? title=

குஜராத் லயன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் தகுதி சுற்றில் இன்று மோதுகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும்.

பிளே-ஆப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதல் இரு இடங்களை பிடித்த குஜராத் லயன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு  அணிகள் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

பெங்களூரு அணி தன் சொந்த மண்ணில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்வதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் அணியின் கேப்டன் விராட் கோலியின் மற்றும் டிவில்லியர்ஸூம் நல்ல பார்மில் உள்ளனர்.  கிறிஸ் கெய்ல் அதிரடிக்கு திரும்பியிருப்பது அணிக்கு வலுசேர்த்துள்ளது.

முதல் முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கிய குஜராத் லயன்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. அணியின் கேப்டன் ரெய்னா, ஆரோன் பின்ச், பிரண்டன் மெக்கலம், பிராவோ, தினேஷ் கார்த்திக் மற்றும் டிவைன் ஸ்மித்  ஆகியோர் இருப்பதால் அணிக்கு பலம் சேர்க்கும்.

எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைவதில் எந்தவித மாற்றமும் இல்லை.

Trending News