FIFA கால்பந்து தொடரில் பங்கேற்க கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு...

உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு, 2022 FIFA உலக கோப்பை தொடைரை காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

Last Updated : Feb 18, 2019, 11:26 AM IST
FIFA கால்பந்து தொடரில் பங்கேற்க கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு... title=

உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு, 2022 FIFA உலக கோப்பை தொடைரை காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

வரும் 2022-ஆம் ஆண்டு கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெறுவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான மூத்த செயல் அதிகாரியாக நாஸர் காட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். 

எதிர்வரும் FIFA உலக கோப்பை தொடரை பிரபலம் செய்யும் விதமாக, இத்தொடரில் பிரபலங்கள் பலரை பங்கேற்கச்செய்ய திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் FIFA உலக கோப்பை தொடரில் இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி கடந்த 1983-ஆம் ஆண்டும், 2011-ஆம் ஆண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், FIFA கால்பந்து 2022 தொடரை காண வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாஸர் காட்டர் தெரிவிக்கையில்., "கத்தாரில் நடக்க இருக்கும் உலகக்கோப்பை தொடர் நாம் அனைவரும் கொண்டாடதக்கதாக இருக்கும் என கூறலாம். உங்களை கத்தாரில் வரவேற்கும் நாளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் கிரிக்கெட் எவ்வளவு பெரிய விளையாட்டு என்பதை நான் கூற வேண்டியதில்லை. ஆகவே, 1983-ஆம் ஆண்டு கோப்பையை வென்ற இந்திய அணியில் உள்ள வீரர்களும், 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வென்ற அணியில் உள்ள வீரர்களும் கத்தார் வந்து உலகக்கோப்பை போட்டிகளை காண வேண்டும்" என அழைப்பு விடுத்துள்ளார்.

Trending News