ஐஎஸ்எல் கால்பந்து: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது கேரளா

Last Updated : Dec 15, 2016, 10:10 AM IST
ஐஎஸ்எல் கால்பந்து: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது கேரளா  title=

ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து மூன்றாவது சீசன் போட்டி அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடந்து வருகிறது. இதில் 

சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய மொத்தம் 8 அணிகள் மோதின.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதின. லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அட்லெடிகோ டீ கொல்கத்தா, மும்பை சிட்டி எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி, டெல்லி டைனமோஸ் எப்.சி என முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

கொல்கத்தா - மும்பை மோதிய அரை இறுதி முதல் சுற்றில் கொல்கத்தா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. நேற்று முன்தினம் மும்பையில் நடந்த அரை இறுதி 2-வது சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகள் மோதின. ஆனால் இந்த ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது. எனவே புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதேபோல கேரளா - டெல்லி அணிகள் மோதிய அரை இறுதி முதல் சுற்றில் கேரளா 1-0 என்ற கணக்கில் வென்றது. நேற்று இரவு நடந்த அரை இறுதி 2-வது சுற்று போட்டியில் டெல்லியை வீழ்த்தியது கேரளா அணி. 

அரைஇறுதியின் 2-வது சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ்-டெல்லி டைனமோஸ் அணிகள் டெல்லியில் நேற்றிரவு எதிர்கொண்டது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதி சுற்றில் கேரளா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. அதனால் இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே இறுதிப்போட்டியை உறுதி செய்து விடலாம் என்ற முனைப்புடன் கேரள வீரர்களும், 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியுடன் டெல்லி வீரர்களும் கோதாவில் குதித்தனர். முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் டெல்லி முன்னிலை பெற்றது.

90 நிமிடங்கள் முடிவில் டெல்லி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் முதலாவது சுற்றில் கேரளா 1-0 என்ற கணக்கில் வென்று இருந்ததால் கோல் வித்தியாசம் அடிப்படையில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையாக கணக்கிடப்பட்டது. இதையடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழையும் அணியை தீர்மானிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 30 நிமிடங் கள் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கேரளா தனது முதல் 4 வாய்ப்புகளில் 3-ஐ கோலாக்கி அசத்தியது.

பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-0 என்ற கணக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வருகிற 18-ம் தேதி கொச்சியில் நடைபெறும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா அணிகள் சந்திக்கின்றன.

Trending News