சென்னை அணிக்கு வரப்போகும் இலங்கை நட்சத்திரம்: விமானத்தில் புறப்பட்டாச்சு

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருக்கும் இலங்கை நட்சத்திர பந்துவீச்சாளரான மகேஷ் தீக்ஷனா இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 10, 2023, 07:47 PM IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் இலங்கை நட்சத்திரம்
  • விமானத்தில் புறப்பட்ட புகைப்படத்த பதிவிட்ட மகேஷ் தீக்ஷனா
  • சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு படை பலமாகிறது
சென்னை அணிக்கு வரப்போகும் இலங்கை நட்சத்திரம்: விமானத்தில் புறப்பட்டாச்சு title=

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட வலி காரணமாக பென் ஸ்டோக்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அதேபோட்டியில் முதல் ஓவரை வீச வந்த தீபக் சாஹருக்கும் காயம் ஏற்பட்டது. அந்த போட்டியில் 5 பந்துகளை சுறுசுறுப்பாக வீசிய அவரால் கடைசி பந்தை வேகமாக வீச முடியவில்லை. எப்படியாவது ஓவரை வீசி முடித்தால்போதும் என அந்த ஓவரை முடித்துவிட்டு களத்தைவிட்டு வெளியேறினார். அதன்பிறகு தீபக் சாஹர் போட்டிக்கு திரும்பவில்லை. 

மேலும் படிக்க | IPL 2023: மாஸ் த்ரில்லர்! கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள்... குஜராத்தை சம்பவம் செய்த ரிங்கு சிங்!

ஏற்கனவே முகேஷ் சவுத்திரி காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்த முழுவதுமாக விலகிவிட்டார். இதனால் அவருக்கு பதிலாக ஆகாஷ் சிங் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். எனினும் அவருக்கு ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லை. அதனால் ஆகாஷ் சிங்கை களமிறக்க தோனி யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல இப்போது தோனி தலைமையில் சிஎஸ்கே அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் மற்ற இளம் வீரர்களுக்கும் கூட போதிய அனுபவம் இல்லை. இருப்பினும் அவர்களை சரியான திசையில் வீச வைத்து போட்டியில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார் தோனி.

அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டே தோனி லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திவிட்டாலும், இனி வரும் போட்டிகள் இப்போது இருப்பதை விட மிகவும் சவாலாக இருக்கும். அதனால் சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேவை. அந்தவகையில் சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மகேஷ் தீக்ஷனா சென்னை அணிக்கு விளையாட இலங்கையில் இருந்து புறப்பட்டுவிட்டார். அவரை கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி ஏலம் எடுத்திருந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டியில் இருந்ததால் அவர் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாட வரவில்லை. ந

இப்போது அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் முடிவடைந்துவிட்டதால் இலங்கை வீரர்கள் ஐபிஎல் போட்டிக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மகேஷ் தீக்ஷனாவும் சென்னை அணிக்கு விளையாட திரும்ப இருப்பதை தன்னுடைய சமூகவலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் விரைவில் சிஎஸ்கே அணியுடன் இணைய இருப்பதாக கூறியுள்ளார். நாளை அவர் சிஎஸ்கே அணியுடன் பயிற்சியில் பங்கேற்க இருக்கிறார். 

மேலும் படிக்க | IPL 2023: ஹைதராபாத் அணிக்கு முதல் வெற்றி... பஞ்சாப்புக்கு முதல் தோல்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News