மும்பை அணி ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி - நீடா அம்பானியின் முடிவால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு வான்கடே மைதானத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 7, 2023, 02:29 PM IST
  • மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல்
  • சனிக்கிழமை இரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரீட்சை
  • ரசிகர்களுக்கான அனுமதியில் சில புதிய கட்டுப்பாடுகள்
மும்பை அணி ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி - நீடா அம்பானியின் முடிவால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி title=

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் கோப்பைகளை வென்ற இரு அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் முதன்முறையாக வரும் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன. வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றன. ஆனால் இந்த போட்டியில் மும்பை அணிக்கான ரசிகர்களை அதிகப்படுத்தும் நோக்கில் நீடா அம்பானி எடுத்திருக்கும் முடிவு சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,. 

மும்பை  - சென்னை மோதல்

ஐபிஎல் தொடரில் மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான மோதல் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இரண்டும் வலுவான அணிகள் என்பதால் அந்த போட்டியில் யார் வெல்வார்கள்? என்ற போட்டி மைதானத்துக்கு உள்ளே வீரர்களுக்கு இடையே நடப்பது போலவே மைதானத்துக்கு வெளியே இருக்கும் ரசிகர்களுக்கு இடையேவும் நடைபெறும். மும்பை அணி 5 முறையும், சென்னை அணியும் 4 முறையும் ஐபிஎல் சாம்பியன் கோப்பை வென்றிருக்கின்றன. 5 கோப்பையை வென்ற மும்பை அணிக்கு ரோகித் சர்மாவும், 4 முறை வென்ற சென்னை அணிக்கு தோனியும் கேப்டன்களாக இருந்திருக்கின்றனர். இதனால், இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி என்பது ஆண்டுக்கு ஆண்டு புதிய உட்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க | ’ரன் அடிக்கிறதே இல்லை.. இவர ஏன் எடுக்கிறாங்க?’ கொல்கத்தா வீரரை விளாசிய கவாஸ்கர்

நீடா அம்பானியின் முடிவு

இந்த தொடரில் வரும் சனிக்கிழமை இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன. அதற்காக இரு அணி வீரர்களும் வான்கடே மைதானத்தில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் போட்டியை நேரில் கண்டுகளிக்க உலகம் முழுவதும் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மும்பை வான்கடே மைதானத்தை நோக்கி படையெடுக்க இருக்கும் நிலையில், அந்த மைதானத்தில் இரண்டு கேலரிகளை மும்பை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக புக் செய்துவிட்டாராம் நீடா அம்பானி. அந்த கேலரியில் மும்பை அணி ரசிகர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆர்டரும் போடப்பட்டிருக்கிறதாம். சிஎஸ்கே உள்ளிட்ட ரசிகர்களுக்கு அந்த கேலரியில் அமர அனுமதியும் இல்லையாம்.

ரசிகர்கள் அதிர்ச்சி

நீடா அம்பானியின் இந்த முடிவால் மற்ற அணி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். படாதுபாடுபட்டு டிக்கெட் வாங்கி மேட்ச் பார்க்க நினைக்கும் சமயத்தில் இரண்டு கேலரிகளை பிரத்யேகமாக மும்பை அணிக்காக மட்டுமே புக் செய்து வைத்திருப்பதால், மற்ற அணி ரசிகர்கள் அந்த கேலரியில் அமர முடியாத சூழல் உருவாகியுள்ளது. மீறி அங்கு அமர நேர்ந்தாலும் மும்பை அணியை மட்டுமே சப்போர்ட் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவுக்கு சிஎஸ்கே உள்ளிட்ட மற்ற அணி ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.  

மேலும் படிக்க | ஐபிஎல் அணிகளில் யாருக்கு அதிக ரசிகர்கள்...? இதோ முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News