CSKvsMI: மும்பைக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம்..!

மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான போட்டியில் பென்ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காலில் ஏற்பற்ற வலி காரணமாக இப்போது அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 8, 2023, 11:13 AM IST
CSKvsMI: மும்பைக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம்..! title=

ஐபிஎல் தொடரின் இரு பெரும் பலம் வாய்ந்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று இரண்டாவதாக நடைபெறும் இப்போட்டியை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில், சென்னை அணிக்கு பின்னடைவான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பென் ஸ்டோக்ஸ் இப்போட்டியில் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், மும்பை வான்கடே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது காலில் வலி ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற்றிருக்கும் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் களமிறங்குவது சந்தேகம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | IPL 2023 LSG vs SRH: முதலிடத்தில் லக்னோ... ஹைதராபாத்தின் தடுமாற்றம் தொடர்கிறது!

அண்மையில் தான் காயத்தில் இருந்து அவர் குணமடைந்திருந்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட அதிகம் பந்துவீசவில்லை. அடுத்து வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஓய்வெடுக்கவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு அறிவுறுத்தியது. ஆனால், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது இருக்கும் நம்பிக்கை காரணமாக பென் ஸ்டோக்ஸை விளையாட அனுமதித்தார். இது குறித்து மெக்கலம் பேசும்போதுகூட, பென் ஸ்டோக்ஸ் காயம் குறித்து நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். அவருக்கும் இது குறித்து தெரியும். 

ஆஷஸ் உள்ளிட்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த தொடர்கள் இருப்பதால் அதிக அழுத்தம் ஸ்டோக்ஸூக்கு கொடுக்கக்கூடாது என்பதில் இங்கிலாந்து அணி கவனமாக இருக்கிறது. இது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்திடமும் பேசியிருக்கிறோம் என தெரிவித்திருந்தார். பென் ஸ்டோக்ஸூம் இது குறித்து சென்னை அணியுடன் பேசிய பிறகே இந்த ஆண்டு ஐபிஎல் விளையாட ஒப்புக் கொண்டார். போதுமான ஓய்வு மற்றும் குறைவான ஓவர்கள் மட்டுமே பந்துவீச செய்ய வேண்டும் என்ற கண்டிஷன் போட்டதாகவும், அதற்கு சிஎஸ்கே சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

அதனடிப்படையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு களமிறங்கிய ஸ்டோக்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடவில்லை. இந்நிலையில், மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்டபோது மீண்டும் காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்ட அவர், ஓய்வெடுத்து வருகிறார். மாலை நடைபெறும் போட்டியில் அவர் களமிறங்குவாரா? என்பது இப்போது வரை கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

மேலும் படிக்க | SRHvsLSG: வானத்துக்கும் பூமிக்கும் குதித்த காவ்யா மாறன்..! கடைசி வரை அந்த சந்தோஷம் நீடிக்கலையே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News