நாளை கடைசி ஒருநாள் போட்டி: தொடரை தட்டிச்செல்லுவது யார்? இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம்

நாளைய போட்டியில் வெற்றி பெரும் அணி ஒருநாள் தொடரை தட்டிச்செல்லும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2019, 08:44 PM IST
நாளை கடைசி ஒருநாள் போட்டி: தொடரை தட்டிச்செல்லுவது யார்? இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம் title=

இந்தியா வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்தியாவும், அடுத்து இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. கடைசி ஒரு போட்டி மட்டும் தான் எஞ்சி இருக்கிறது. இதில் வெற்றி பெரும் அணி ஒருநாள் தொடரை தட்டிச்செல்லும். 

இந்தநிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த போட்டி வழக்கம் போல பகல்-இரவு ஆட்டமாக ஆடப்படும். இந்த போட்டி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும். 

ஏற்கனவே முதலில் நடைபெற்ற டி-20 தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இதனால் நாளை நடைபெறும் போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

Trending News