இந்தியா - இங்கிலாந்து 2-வது டெஸ்ட்: கோலி 167 ரன்னில் அவுட்

Last Updated : Nov 18, 2016, 11:04 AM IST
இந்தியா - இங்கிலாந்து 2-வது டெஸ்ட்: கோலி 167 ரன்னில் அவுட் title=

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி லோகேஷ் ராகுல் டக் அவுட்டானார். முரளி விஜய் 20 ரன்கள் எடுத்து அவுட்னார்.

தொடர்ந்து ஆடிய விராத் கோலி மற்றும் புஜாரா தங்கள் சதத்தை நிறைவு செய்தனர். 204 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்த புஜாரா அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய ரஹானே 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

பின்னர் விராத் கோலியுடன் ஜோடி சேர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடி வருகிறார். கேப்டன் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 167 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 311 ரன்கள் எடுத்திருந்தது.

Trending News