தீபாவளிக்குப் பிறகு இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிராகாசிக்கும்

தீபாவளிக்குப் பிறகு, குரு பகவான் வியாழன் மீனத்தில் சஞ்சரிக்கிறார் அதாவது பெயர்ச்சி ஆகுகிறார். இதன் காரணத்தால் சில ராசிக்காரர்களுக்கு வலுவான பண ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 6, 2022, 08:24 AM IST
  • குரு பெயர்ச்சி 2022
  • குருவின் அருளால் மகிழ்ச்சி ஏற்படும்
  • வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்பு ஏற்படும்
தீபாவளிக்குப் பிறகு இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிராகாசிக்கும் title=

குரு மார்கி 2022, குரு பெயர்ச்சி: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகத்தின் மாற்றம் அல்லது அதன் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் நேரடியாக மக்களை பாதிக்கிறது. குருபெயர்ச்சிக்குப் பிறகு பிற்போக்கான பாதை அமையும். தகவலுக்கு, குரு பகவான் வியாழன் கடந்த 29 ஆம் தேதி ஜூலை மாதம் 2022 அன்று மீன ராசியில் சஞ்சரித்து, பயணித்து வருகிறார். குரு ஒரு பிற்போக்கு நிலையில் அதாவது தலைகீழாக நடந்து கொண்டிருந்தார். இப்போது அக்டோபர் 26 மீன ராசியில் நகர்கிறது. வியாழன் நவம்பர் 24, 2022 வரை இந்த ராசியில் இருப்பார். ஆகாண்படி குருவின் வழிகாட்டுதலால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் உள்ள வியாழன் நல்ல காலத்தை உருவாக்கித் தருவார். ரிஷபம் ராசிக்காரர்கள் வருமானத்தில் வெற்றி பெறுவார்கள். புதிய வருமானம் பெருகும், வருமானம் அதிகரிக்கும். வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உங்களின் உறவுகளில் இனிமை இருக்கும். புதிய நபர்களின் சந்திப்பு இந்தக் காலக்கட்டத்தில் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | மாறுகிறது சனியின் பாதை: இந்த ராசிகளின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் 

மிதுனம்: மீனத்தில் வியாழன் சஞ்சாரம் செய்வதால், மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். மிதுனம் ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் முன்னேற்றம் அடையலாம். வியாபாரத்தில் பெரிய அளவில் சலுகைகள் கிடைக்கும். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நாள்பட்ட நோய்களில் இருந்தும் நீங்கள் விடுபடலாம்.

கடகம்: குருவின் பாதையில் இருப்பதால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபமும், வருமானமும் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அதிக பயன் பெறுவார்கள். மேலும், தொழில் சம்பந்தமான விஷயங்களுக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள்.

கும்பம்: மீன ராசியில் வியாழன் சஞ்சரிப்பதால், கும்ப ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

வாழை மரத்தை வணங்க வேண்டும்
மத நூலான மகாபாரதத்தின் படி, குரு பகவான் பிருஹஸ்பதி மகரிஷி ஆங்கிரீசரின் மகன் ஆவார். சாஸ்திரங்களின்படி, வியாழன் பிரம்மா கிரகத்தை குறிக்கிறது. அதன்படி வாழை மரத்தை குருவாகக் கருதி வழிபட்டால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | விருச்சிக ராசியில் நுழையும் சுக்கிரன், இந்த 6 ராசிகளுக்கு பண வரவு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News