கெத்து..3 சிங்கங்களை அலறவிட்ட நீர்யானை: ஷாக்கிங் வைரல் வீடியோ

விலங்குகளின் ராஜாவாக சிங்கம் இன்னும் நம் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருந்தாலும், இந்த வைரலான வீடியோ, நாம் நினைக்கும் விஷயங்கள் எப்போதும் போல் இருக்காது என்பதைக் காட்டுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 18, 2023, 03:04 PM IST
  • சிங்கங்களை தாக்க முயன்ற நீர்யானை.
  • இன்றைய வைரல் வீடியோ.
கெத்து..3 சிங்கங்களை அலறவிட்ட நீர்யானை: ஷாக்கிங் வைரல் வீடியோ title=

இன்றைய திக் திக் வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

அப்படி சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் வனவிலங்குகளின் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வெளியாகியுள்ள வீடியோவில் நீர்யானை ஒன்று கம்பீரமான மூன்று சிங்கங்களை தாக்க முயற்சிக்கும் சம்பவம் இணையவாசிகளுக்கு ஷாக் தந்துள்ளது.

மேலும் படிக்க | ஆத்தாடி..3 சிறுவர்களை விழுங்க முயற்சித்த நீர்யானை: ஷாக்கிங் வைரல் வீடியோ

பொதுவாக கடலில் மற்றும் நீர் நிலைகளில் வாழும் விலங்குகளில் சுறா, முதலை,  உள்ளிட்ட விலங்குகள் மிகவும் ஆபத்தானது என்று நாம் அனைவர்க்கும் தெரியும். இந்த விலங்குகள் தண்ணீர் குள் வருவதை நாம் சுலபமாக பார்க்க முடியும். ஆனால் நீர் யானை வந்தால் அவ்வளவு சுலபமாக பார்க்க முடியாது. ஏனென்றால், அவை தூரத்திலிருந்து தண்ணீர் குள் மிகவும் அமைதியுடன் வந்து நம்மளை தாக்கும். இதற்கான பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் போட்ஸ்வானாவில் உள்ள செலிண்டா ரிசர்வ் ஸ்பில்வேவில் நடந்துள்ளது. இதில் மூன்று சிங்கங்கள் போட்ஸ்வானாவில் உள்ள செலிண்டா ரிசர்வ் ஸ்பில்வேயில் ஒரு ஆற்றைக் கடக்க முயன்றன. அப்போது ஒரு நீர்யானை உடனடியாக மூன்று சிங்கக்கத்தையும் வளைத்து பிடித்து, வலிமை மற்றும் பிராந்திய ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தண்ணீரில் சிங்கங்களில் ஒன்றைத் தாக்கத் தொடங்கியது. இந்த வீடியோ சம்பவம் தற்போது படுவேகமாக டிரெண்டாகி வருகிறது.

சிங்கக்கத்தை தாக்கும் நீர்யானையின் வீடியோவை இங்கே காணுங்கள்: 

நீர்யானை சிங்கத்தை பயமுறுத்தும் இந்த வீடியோ, பதிவிட்டு சிறிது நேரத்தில் வைரலானது. நீர்யானைகள் எவ்வளவு ஆபத்தானவை மற்றும் கணிக்க முடியாதவை என்பதைப் பலரும் உணர வைக்கிறது இந்த வீடியோ. அத்துடன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறை இல்லை. கடந்த காலங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | 'அது நானா...இல்லையா?’-ஆடு செய்யும் அலப்பறை.. அடக்க முடியாம சிரிப்பீங்க: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News