ஓடும் சரக்கு ரயிலில் சிக்கிய ஆண்: சாதுர்யமாய் உயிர்தப்பிய காட்சி....

நகரும் ரயிலின் தண்டவாளத்தில் சிக்கிய ஆண், தனது முற்போக்கு சிந்தனையால் நூலிழையில் உயிர்தப்பிய தப்பிக்கும் காட்சி அனைவரையும் ஈர்த்துள்ளது!

Last Updated : Nov 19, 2018, 01:28 PM IST
ஓடும் சரக்கு ரயிலில் சிக்கிய ஆண்: சாதுர்யமாய் உயிர்தப்பிய காட்சி.... title=

நகரும் ரயிலின் தண்டவாளத்தில் சிக்கிய ஆண், தனது முற்போக்கு சிந்தனையால் நூலிழையில் உயிர்தப்பிய தப்பிக்கும் காட்சி அனைவரையும் ஈர்த்துள்ளது!

ஆந்திராவை சேர்ந்த ஒருவர் நகரும் ரயிலின் தண்டவாளத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு புறம் இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்தாலும் மற்றொரு புறம் இந்த வீடியோ காட்சியானது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது.  

ஆந்திராவில் சரக்கு ரயில் தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் ரயிலுக்கு அடியில் படுத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அனந்தபூர் ரயில் நிலையத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடுத்த நடைமேடைக்குச் செல்வதற்காக பாலத்தைப் பயன்படுத்தாமல் தண்டவாளத்தைக் கடந்து சென்றார். அப்போது சரக்கு ரயில் ஒன்று அதிவேகத்தில் வந்ததைக் கண்ட அந்த நபர், சாதுர்யமாக தண்டவாளத்திற்கு நடுவே படுத்துக் கொண்டார்.

சுமார் 50 வினாடிகள் தண்டவாளத்தின் நடுவே படுத்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், தனது மொபைல் போன் மூலம் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Trending News