மரம் ஏறியும் விடாத கரடி - வசமாக சிக்கிய சுற்றுலா பயணி: வைரல் வீடியோ

மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் கரடியிடம் வசமாக சிக்கிக் கொண்டார். மரத்தில் ஏறி தப்பிக்கலாம் என நினைத்தாலும் கரடியும் மரத்தில் ஏறியதால் திகிலின் உச்சத்துக்கே சென்றார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 11, 2023, 11:15 PM IST
  • கரடியிடம் சிக்கிய நபர்
  • விடாமல் துரத்துகிறது
  • மரத்தில் ஏறியும் விடவில்லை
மரம் ஏறியும் விடாத கரடி - வசமாக சிக்கிய சுற்றுலா பயணி: வைரல் வீடியோ title=

மரணத்துக்கான வாசலை பார்க்க வேண்டும் என்றால் மலையேற்றம் நிச்சயம் கொடுக்கும். மரணத்துக்கான வாசலை பல நேரங்களில் அருகில் சென்று பார்க்கும் அனுபவத்தை அது கொடுக்கும். அப்படி டிரெக்கிங் சென்ற ஒருவர் கரடியிடம் மாட்டிக் கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது. ஒரு கரடி காட்டிற்குள் நடமாடும் மனிதனைப் பார்த்ததும் அவரை பின்தொடர்ந்து சென்றிருக்கிறது. அவர் அதனிடம் இருந்து தப்பிக்க மரத்தில் ஏறுகிறார். பின்னால் சென்ற கரடியும் ஏறக்குறைய மரத்தில் ஏற முயற்சி செய்தது அவருக்கு திகில் அனுபவத்தைக் கொடுத்தது. அதிர்ஷ்டம் ஏனோ அவர் பக்கம் இருந்ததால் தப்பித்துவிட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர். ஏனென்றால் கரடிக்கும் மரம் ஏற தெரியும். 

மேலும் படிக்க | வேட்டைக்கு வந்த கருநாகத்தை தலையில் அடித்து கதறவிட்ட பூனை: வீடியோ வைரல்

இந்த வீடியோ டிவிட்டர் பக்கத்தில் 'CCTV IDIOTS' என்ற ஹேண்டில் பகிர்ந்துள்ளது. "ஹைக்கர் மற்றும் கரடி இடையேயான பயங்கரமான சந்திப்பு" என்று அந்த இடுகை தலைப்பிடப்பட்டிருந்தது. அந்த காணொளியில் மனிதர் ஒருவர் மரத்தில் ஏற முயல்வது காணப்பட்டது. மனிதனுக்கு கீழே, ஒரு பெரிய காட்டு கரடி மலையேற்றக்காரரைப் பிடிக்க முயற்சிப்பதைக் காண முடிந்தது. கரடி ஏறக்குறைய சில முறை அந்த நபரை பிடிப்பது போல் தோன்றியது. ஆனால் மலையேற்றக்காரர் எப்படியோ மேலே ஏறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, காட்டு விலங்கும் மரத்தில் ஏறத் தொடங்கியது.

இதனால் திகிலின் உச்சத்தில் அவர் இருந்த நிலையில், இறுதியில் அதன் இரையை விட்டுவிட்டு கரடி கீழே வந்தது. இந்த வீடியோ வைரலாக பரவி நெட்டிசன்களை அச்சத்தில் ஆழ்த்தியது. சிலர் அந்த மனிதன் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டனர். மற்றவர்கள் இந்த சம்பவத்தை இலகுவாக எடுத்துக் கொண்டனர் மற்றும் கரடியின் நடத்தையை அரவணைப்பதற்காக ஏங்கும் செல்ல நாயுடன் ஒப்பிட்டனர்.

கமெண்ட் செக்‌ஷனில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். "அவர் கரடியிடம் பிடிபட்டால்??" என ஒரு பயனர் கேட்டார். "இது பயங்கரமானதல்ல, கரடி விளையாட விரும்புகிறது" என்று இரண்டாவது நபர் கூறினார். "அந்த கேமராவை அவர்கள் எப்படி சரியாக அமைத்தார்கள்?" மூன்றாவது நெட்டிசன் சந்தேகத்துடன் கேட்டார். "ஏய், வா, என்னைக் கட்டிக்கொள்" என்று நான்காவதாக இன்னொருவர் கமெண்ட் அடித்துள்ளார். "அவர் விளையாடிக் கொண்டிருந்தார். கரடி வந்துவிட்டது என இன்னொருவர் காமெடியாக கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News