கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும் இந்த 5 உணவுகள்! கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களுக்கு NO

Pregnacny Care Foods: கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கருவுற்ற பெண் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

கருவுற்ற பெண்கள் உண்ண வேண்டிய உணவுகளுக்கு என்று ஒரு லிஸ்ட் இருந்தால், உண்ணக்கூடாதவற்றிறகான பட்டியலும் நீளமாக இருக்கிறது

1 /8

கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் சாப்பிடக்கூடாத உணவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். இந்த உணவுகள் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது.

2 /8

கர்ப்பத்தின் முதல் 3 மாதங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இந்த காலகட்டத்தில், கருப்பையில் வளரும் கருவின் உடல் அமைப்பு மற்றும் உறுப்புகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, இந்த காலகட்டத்தில் பெண்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் தவறுதலாக கூட சாப்பிடக்கூடாத சில விஷயங்கள் உள்ளன, ஏனெனில் அவை கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும்.

3 /8

பப்பாளி சாதாரண மக்களுக்கு ஒரு அற்புதமான பழம், ஆனால் பப்பாளியில் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தும் ஈஸ்ட்ரோஜன் உள்ளது. இதன் காரணமாக கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் தவறுதலாகக் கூட பப்பாளியை உட்கொள்ளக் கூடாது

4 /8

கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதற்குக் காரணம், பலாப்பழம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது, அதனால்தான் கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களுக்கு பலாப்பழம் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.  

5 /8

அன்னாசி நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் இதை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதற்குக் காரணம், இதில் காணப்படும் புரோமிலைன் என்சைம், கருப்பையை சுருங்கச் செய்யும். இதன் காரணமாக கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.

6 /8

கர்ப்பத்தின் தொடக்கத்தில் உங்கள் உணவில் பச்சை முட்டையை சேர்த்துக் கொள்ள்வேண்டாம்.  சால்மோனெல்லா பாக்டீரியா பச்சை முட்டைகளில் காணப்படுகிறது. இது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் நேரடியாக தீங்கு விளைவிக்கும். அதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் பச்சை முட்டைகளை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

7 /8

மது, புகை, இரண்டுமே இத்தகைய போதைப் பொருள்கள், யாராவது ஒருமுறை அதற்கு அடிமையானால், அவர்களால் எளிதில் அதிலிருந்து விடுபட முடியாது. கர்ப்ப காலத்தில் அவற்றை உட்கொள்வது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தானது.  

8 /8

கருவுற்ற பெண்கள் ஆரோக்கியமான உணவு உண்டால் குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும்