VIDEO GAMING: வீடியோ கேம் விளையாட நிறுவனங்கள் பணம் கொடுக்கும்! காரணம் என்ன தெரியுமா?

புதுடெல்லி. இந்த தொழில்நுட்ப சகாப்தத்தில், நாம் ஒரு மெய்நிகர் உலகத்தை நோக்கி வேகமாக நகர்கிறோம். நம்முடைய எல்லா வேலைகளும் பொழுதுபோக்குகளும் கூட, ஆன்லைனில் நடக்க ஆரம்பித்துவிட்டன.

வீடியோ கேம் விளையாடும் போக்கும் வெகுவாக அதிகரித்துள்ளது. இனி வரும் காலங்களில் வீடியோ கேம் விளையாடுவதற்கு, நிறுவனங்கள் பணம் தரும் என்று கூறப்படுகிறது.

1 /5

தற்போது விளையாடுபவர்கள் பணம் செலுத்துகின்றனர் பொதுவாக, விளையாடுபவர்கள் வீடியோ கேம்களை வாங்குவதற்கும், அதன் சில அம்சங்களைப் பயன்படுத்தவும் பணம் செலவழிக்கின்றனர்.அதாவது தற்சமயம் அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளை விளையாட பணம் செலுத்த வேண்டியுள்ளது.

2 /5

இன்னும் ஐந்து வருடங்களில் இப்படி ஒன்று நடக்கும் பிரபல சமூக ஊடக தளமான ரெடிட்டின் நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கேமிங் நிறுவனங்கள் கேம் விளையாடுபவர்களுக்கு பணம் செலுத்தும் விதத்தில் மாற்றம் ஏற்படும் என்று கூறுகிறார்.

3 /5

அலெக்சிஸ் ஓஹானியனின் தீர்க்கதரிசனம் அலெக்சிஸ் ஓஹானியன், 'வேர் இட் ஹேப்பன்ஸ்' என்ற தலைப்பில் ஒரு போட்காஸ்டில், ஆன்லைன் சேவைகள் மற்றும் தளங்களைப் பயன்படுத்துபவர்களில் 90% பேர் ஐந்து ஆண்டுகளுக்குள் பரவலாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பு அல்லது DAO இன் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.

4 /5

சம்பாதிப்பதற்கான விளையாட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் அலெக்சிஸ் ஓஹானியன், வரும் காலங்களில், வீடியோ கேம்களில் விளையாடி சம்பாதிக்கும் கேம்கள் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்புகிறார், ஏனெனில் விளையாடுபவர்கள் தங்கள் நேரத்தை விளையாடும் போது, ​​அவர்கள் செலவு செய்த நேரத்திற்கு பணம் பெற முயற்சிப்பார்கள்.

5 /5

கேமிங் தொழில் பெரியதாக வளரும் வரும் காலத்தில், கேமிங் துறை மிகப் பெரிய தொழிலாக மாறும் என்றும், ஹாலிவுட் மற்றும் இசைத்துறையின் மொத்த விற்பனையை விட அதன் விற்பனை எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.