இசக்கிக்கு தாலி பிரித்து போட சம்மதம் தெரிவிக்கும் சௌந்தரபாண்டி! உயிர் வெல்லக்கட்டியா?

Zee Tamil Serial Anna Update: பாத்ரூம் கழுவும் பாண்டியம்மா, சௌந்தரபாண்டியை வைத்து கேம் விளையாடும் பாக்கியம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 28, 2024, 03:30 PM IST
  • பாத்ரூம் கழுவும் பாண்டியம்மா
  • சௌந்தரபாண்டியை வைத்து கேம் விளையாடும் பாக்கியம்
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
இசக்கிக்கு தாலி பிரித்து போட சம்மதம் தெரிவிக்கும் சௌந்தரபாண்டி! உயிர் வெல்லக்கட்டியா? title=

Zee Tamil Anna Serial Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி பாண்டியம்மாவை பாத்ரூம் கழுவ வைக்க அதை பார்த்து சௌந்தரபாண்டி. முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதிகம் விரும்பி பார்க்கப்படும், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அண்ணா சீரியலில், சௌந்தரபாண்டி அக்கா நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்யுற என்று கேட்கிறான். இதுல என்னடா இருக்கு நான் யூஸ் பண்ற பாத்ரூம் தானே என்று சொல்கிறார், இசக்கியும் இந்த ரூம்ல தான இருக்கா, அவளை கழுவ சொல்ல வேண்டியது தானே என்று கேட்க ஒரு பிரச்சனையும் இல்ல என்று  அவள் சொல்கிறாள்.

ஆனால், அவளை கழுவ சொல்ல வேண்டியது தானே என்று முத்துப்பாண்டி கேட்க சௌந்தரபாண்டி என் அக்கா யார் பேச்சையும் கேட்க மாட்டா நீ வா என்று அழைத்து வந்து விடுகிறார்.

இதனை பார்த்து சந்தோஷமடையும் பாக்கியா இசக்கி முத்துபாண்டியோட கொட்டத்தை அடக்குவா, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு என சந்தோசப்படுகிறாள். பிறகு இசக்கிக்கு தாலி பிரித்து போட முடிவெடுக்கிறாள்.

மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய்: தப்பித்த சுடர்... டார்ச்சர் செய்து தவிக்க விடும் குழந்தைகள்!

வைகுண்டத்தை நேரில் சந்தித்து தாலி பிரித்து போட போவதாக சொல்லி எல்லாரையும் அழைத்து வர சொல்கிறாள். வைகுண்டம் அது எப்படி முடியும்? ஷண்முகம் எப்படி வருவான் என்று கேட்க நீ எப்படியாவது கூட்டிட்டு வா அண்ணே என்று சொன்னதும் வைகுண்டமும் சரி என்று வாக்கு கொடுக்கிறார். 

வீட்டிற்கு வந்து நாளைக்கு கோவிலில் வைத்து மாலை போட போறேன், வீட்ல எல்லாரும் வரணும் என்று சொல்லி எல்லாரையும் சம்மதிக்கவும் வைக்க மறுபக்கம் பாக்கியம் சௌந்தரபாண்டியிடம் முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் மறுதாலி கட்டணும், அது வரைக்கும் உங்க உயிருக்கு கண்டம் இருக்குனு ஜோசியர் சொல்லிட்டாரு என்று அழுவது போல ட்ராமா போடுகிறாள்.

உயிருக்கு பயந்து சௌந்தரபாண்டி இசக்கிக்கு தாலி பிரித்து போட சம்மதம் தெரிவிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தனுஷ் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி-கமல்!?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News