விக்ரம், ஹிந்தி சூரரை போற்றை தொடர்ந்து மற்றொரு படத்திலும் கெஸ்ட் ரோலில் சூர்யா!

ஷாருக்கான் மற்றும் சூர்யா இருவரும் 'ராக்கெட்ரி' படத்தில் கேமியோ ரோலில் நடித்ததற்காக ஒரு பைசா கூட வாங்கவில்லை என்று மாதவன் கூறியுள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Jun 21, 2022, 03:23 PM IST
  • ராக்கெட்ரி படம் ஜுலை 1ம் தேதி வெளியாக உள்ளது.
  • இந்த படத்தை மாதவன் இயக்கி, நடித்துள்ளார்.
  • ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விக்ரம், ஹிந்தி சூரரை போற்றை தொடர்ந்து மற்றொரு படத்திலும் கெஸ்ட் ரோலில் சூர்யா! title=

நடிகர் ஷாருக்கானுக்கு ஏரளமான ரசிகர்கள் உள்ளனர், பல பிரபலங்கள் கூட இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.  பலரையும் தனது திறமையால் பிரமிக்க வைத்திருந்த நடிகர் ஷாருக்கான் தற்போது நடிகர் மாதவனையும் தனது பணிவான குணத்தால் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.  நடிகர் மாதவன் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' என்கிற படத்தை இயக்கி, அதில் நடித்தும் இருக்கிறார்.  இப்படம் வரும் ஜுலை 1ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.  இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் கலந்துகொண்ட போது பேசியவர் தனது படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்ததற்கு நடிகர் ஷாருக்கான் ஒரு பைசா கூட வாங்கிகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறிய அஜித்! முந்திக்கொண்ட சிவகார்த்திகேயன்!

ஷாருக்கான் சாருடன் 'ஜீரோ' படத்தில் பணிபுரிந்தபோது அவரிடம் 'ராக்கெட்ரி' படம் பற்றிக் கூறினேன். அதன் பிறகு அவரது பிறந்தநாள் விழாவில் அவர் என்னிடம் இந்த படத்தின் தற்போதைய நிலையைப் பற்றி கேட்டுக்கொண்டார்.  பின்னர் இந்த படத்தில் நடிக்க அவருக்கும் விருப்பம் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். அவர் என்னிடம் 'நான் இந்த படத்தில் எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கிறேன், இந்த படத்தின் ஒரு பகுதியாக நான் இருந்தால் மட்டும் போதும்' என்று கூறினார்.  அவர் இதனை விளையாட்டாக சொல்லி என்னை கேலி செய்கிறார் என்று நான் நினைத்துக்கொண்டேன்.  ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு என் மனைவி சரிதா கான் என்னிடம் ஷாருக்கான் சாருக்கு நன்றி சொல்லும்படி என்னிடம் கேட்டார். 

rocket

பின்னர் நான் ஷாருக்கான் சாரின் மேனேஜரிடம் எனது நன்றியை தெரிவிக்க சொல்லி ஒரு மெசேஜ் அனுப்பினேன்.  நான் மெசேஜ் அனுப்பிய உடனேயே மேனேஜரிடமிருந்து எனக்கு மெசேஜ் வந்தது, 'படப்பிடிப்பு எந்த தேதியில் நடைபெறுகிறது' என்று பதில் வந்தது.  அப்படித்தான் அவர் எங்கள் படத்தின் ஒரு அங்கமானார் என்று மாதவன் சிலவற்றை நினைவுகூர்ந்து தெரிவித்தார்.  ஷாருக்கான் மட்டுமல்லாது நடிகர் சூர்யாவும் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்ததற்கு எவ்வித சம்பளமும் பெற்றுக்கொள்ளவில்லை என்று மாதவன் கூறினார்.  1994ம் ஆண்டு உளவு பார்த்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த 'ராக்கெட்ரி' படம்.

ஷாருக்கான் மற்றும் சூர்யா இருவரும் இப்படத்தில் நடித்ததற்காக ஒரு பைசா கூட வாங்கவில்லை, மேலும் அவர்கள் கேரவன்கள், உடைகள் மற்றும் உதவியாளர்களுக்கு கூட எதுவும் பணம் வாங்கவில்லை.  எங்களுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தனது சொந்த செலவிலேயே சூர்யா விமானத்தில் வந்திறங்கினார் என்று மாதவன் கூறினார்.  இப்படத்தில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார், படம் ஜூலை 1ம் தேதி வெளியாகிறது.  இந்தப் படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது, மேலும் ஹிந்தி உட்பட ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற ஆறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

மேலும் படிக்க | 'புஷ்பா 2' படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News