SeePics: மூன்று நாயகிகளுடன் வருகிறது நாகினி-3!

நாகினி 3-ஆம் பாகத்தில் மூன்று நாகினி இடம்பெறும் என தொடரின் குழுவினர் தெரிவித்துள்ளனர்!

Last Updated : May 17, 2018, 03:13 PM IST
SeePics: மூன்று நாயகிகளுடன் வருகிறது நாகினி-3! title=

நாகினி 3-ஆம் பாகத்தில் மூன்று நாகினி இடம்பெறும் என தொடரின் குழுவினர் தெரிவித்துள்ளனர்!

தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு. வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் காலடி எடுத்துவைத்தப் போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளம் பதித்தது நாகினி தொடர். 

இந்த தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் மற்றம் ஆதா கான் நாடுமுழுவதிலும் இருக்கும் இளைஞர்களை காட்டிலும் தமிழக இளைஞர்களிடையே பெரும் ரசிகர் பட்டாளத்தினை பெற்றனர். தமிழில் ஒரு பாகம் மட்டுமே வெளியான இத்தொடரின் மூலம் பிரபலமான இவர்கள் இந்தி தொடர்களில் 2 பாகங்களிலும் நடித்துள்ளனர்.

இந்த நாகினி தொடரின் இரண்டு பாகங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது அதன் அடுத்த பாகத்தினை இத்தொடரின் குழுவினர் துவங்கியுள்ளனர். ஆனால் முந்தைய நாயகிகளுக்கு பதிலாக அனிதா மற்றும் கரிஷ்மா என்னும் இரு நாயகிகள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது 3-வது நாயகியாக சுரூபி ஜோதி என்பவர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News