சசிகலா தேர்வு: கமல்ஹாசன் கருத்து

Last Updated : Feb 6, 2017, 07:31 PM IST
சசிகலா தேர்வு: கமல்ஹாசன் கருத்து title=

தமிழக அரசியல் மாற்றம் குறித்தும், ஜல்லிக்கட்டு குறித்தும், நடிகர் கமல்ஹாசன் அன்றாடம் தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டு வருகிறார். இது தமிழக அரசியல் 
மற்றும் திரையுலக வட்டாரத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 

இப்போது சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்ட நிலையில் கமல் ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில்“பீலிபெய் சாகாடும் அச்சிறும்அப்பண்டம் சால மிகுத்துப்பெறின்” என்ற திருக்குறளை வெளியிட்டிருந்தார்.

 

 

 

இந்தக் குறளுக்கு அர்த்தம் பின்வருமாறு: மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும் அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால், அச்சு முறியும்' என்பதாகும். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News