கையில் தாலியுடன் முத்துப்பாண்டி... சண்முகத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - அண்ணா சீரியல்

 Zee Tamil Anna Serial July 31st 2023 Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 31, 2023, 01:04 PM IST
கையில் தாலியுடன் முத்துப்பாண்டி... சண்முகத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - அண்ணா சீரியல் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் கடந்த எபிசோட்டில் சௌந்தர பாண்டி ரத்னாவை இரவோடு இரவாக தூக்க போவதாக சவால் விட்ட நிலையில் பரணி கோயிலுக்கு வந்து சண்முகத்திடம் விசயத்தை சொல்ல அவன் இது எதையும் கேட்காமல் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க பிறகு பரணி விஷயத்தை சொல்ல சண்முகம் தேங்காய் உடைக்க அந்த தேங்காய் துண்டு பரணியின் நெற்றியில் பறந்து போய் விழுகிறது. 

அதன் பிறகு சண்முகம் பரணி சொன்ன விஷயத்தை கேட்டு என்னை மீறி என் தங்கச்சி மேல கை வைக்க முடியாதுனு உங்க அப்பா கிட்ட சொல்லு, அப்படியே அவர் கை வச்சா அதுக்கு மேல ஏற்படுற அசம்பாவிதத்திற்கு நான் பொறுப்பு கிடையாது என்பதை அத்தையிடம் சொல்லிவிடு என்று எச்சரிக்கிறான். 

இதனைத் தொடர்ந்து பரணி வீட்டுக்கு வரும்போது சௌந்தரபாண்டி அவளை தடுத்து நிறுத்தி எங்க போயிட்டு வர யாருடன் போயிட்டு வர என்று கேள்வி கேட்க அவர் சண்முகத்துடன் கோவிலுக்கு போய் வந்ததை சொல்ல நாலாம் கிளாஸ் கூட தாண்டாத அவனுக்கு ஹியூமன் ரைட்ஸ் எல்லாம் எப்படி தெரியும்? நீ தான் அவனுக்கு உதவுனியா? என்று கேள்வி கேட்க பரணி இல்லை என பொய் சொல்கிறாள். அதுமட்டுமல்லாமல் பரணிக்கு உனக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா என நடத்தையை தவறாக பேச நீங்க தானே என்னுடைய அப்பா என்று பதிலடி கொடுத்து சௌந்தர பாண்டியின் மூக்கு உடைக்கிறார்.

இன்னொரு முறை இதே மாதிரி ஏதாவது கேள்வி கேட்டா எனக்கு இன்னொரு சந்தேகம் இருக்கு அத நான் உங்ககிட்ட கேட்பேன் என சொல்ல சௌந்தரபாண்டி ஜர்க் ஆகிறார். மறுபக்கம் சண்முகம், தங்கைகள் என எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க அப்போது வைகுண்டம் குருவிக்கூடு மாதிரி வாழ்ந்துட்டு இருக்கோம்.. அந்த சௌந்தரபாண்டி நல்லவன் கிடையாது, ஊரை விட்டு போயிடலாம் என்று கூறுகிறார். 

சண்முகம் 15 வருஷத்துக்கு முன்னாடி இவனுங்கள நீ இப்படி எதிர்த்து பேசி இருந்தா இன்னைக்கு இப்படி நடந்திருக்காது, இவன்களுக்கு பயந்து ஊர விட்டு ஓடிப்போனா எங்களுடைய அடுத்த தலைமுறையும் இந்த பழியை சுமக்க வேண்டியது இருக்கும் என்று சண்முகம் கோபப்படுகிறான். இசக்கி அவங்க அக்கா மேல கை வச்சுட்டா என்ன பண்றது என்று பயத்தை சொல்ல சண்முகம் அப்படி எதுவும் நடக்காது.

என்னை மீறி உங்க மேல எவனாவது கைய வச்சா அவங்கள வெட்டி போட்டுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன். 10 பேர் வந்தாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது 10 பேரையும் வெட்டி சாய்த்து விட்டு ஜெயிலுக்கு போயிடுவேன் என்று சொல்ல எங்களுக்கு அவனுங்க மேல பயம் கிடையாது, உன்னால அவனுக்கு ஏதாவது ஆயிடுமோனு தான் பயம் என தங்கைகள் கூறுகின்றனர். 

அடுத்ததாக முத்துப்பாண்டி நான்கு பேருடன் வீட்டுக்கு வர சௌந்தரபாண்டி மகனைப் பார்த்து நீ மத்தவங்கள கைது பண்ணி கூட்டிட்டு போறத நான் பார்த்திருக்கேன். ஆனா உன்னையே கைது பண்ணி கூட்டிட்டு போயிட்டாங்க என்று வருத்தப்படுகிறார். அதையெல்லாம் வக்கீல் வச்சி பேசி முடிச்சாச்சு அந்த ரத்னாவை நியாயமான முறையில கல்யாணம் பண்ணனும்னு நெனச்சேன், ஆனா இனியும் சும்மா இருக்க முடியாது.. இன்னைக்கு அவ கழுத்துல தாலி கட்ட போறேன் என்னை ஆசீர்வாதம் பண்ணு என தாலியை எடுத்துக்காட்ட அதைப் பார்த்து சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். 

அது மட்டுமல்லாமல் இவர்கள் பேசுவது என்ன என்று தெரியாமல் தூரத்தில் இருந்து பார்க்கும் பாக்கியமும் பரணியும் தாலியை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News