பஞ்சாயத்தில் அவமானப்பட்ட ரங்கநாயகி..அடுத்தது என்ன?மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

Written by - Yuvashree | Last Updated : May 12, 2023, 11:52 AM IST
  • மீனாட்சி பொண்ணுங்க தொடரில் வெற்றியின் குடும்பத்தினர் பஞ்சாயத்தை கூட்டுகின்றனர்.
  • பஞ்சாயத்தில் சரண்யாவின் வயிற்றில் வளரும் குழந்தை குறித்த பேச்சு எழுகிறது.
  • பலவிதமான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் உள்ளது.
பஞ்சாயத்தில் அவமானப்பட்ட ரங்கநாயகி..அடுத்தது என்ன?மீனாட்சி பொண்ணுங்க அப்டேட் title=

தமிழ் சீரியல்களுள் பிரபலமான ஒன்றாக இருக்கும் மீனாட்சி பொண்ணுங்க தொடர் பல ஆயிரம் குடும்பத்தாரின் மனங்களை கவர்ந்துள்ளது. பெண்கள் மட்டுமே நிறைந்த மீனாட்சியின் குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியல், பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள விஷயங்களை பார்க்கலாம் வாங்க. 

இதுவரை நடந்தது..

கல்யாண மண்டபத்தில் பூஜாவை சரளா சமாதானப்படுத்த, பூஜா சக்தியை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கூறி விட்டு செல்கிறாள். ரங்கநாயகி ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டி விட்டு அருகில் ரிவால்வரை வைத்துக் கொண்டு, அறையில் உள்ள பொருட்களை எல்லாம் போட்டு உடைக்கிறாள். செல்வ முருகன் சமாதானப்படுத்தியும் அவள் வெளியில் வரவில்லை. இதற்கெல்லாம் காரணம் சக்தி தான் என்று வெற்றி சொல்ல, இல்லை நான் தான் காரணம் என்று சரண்யா சொல்கிறாள். மறுபக்கம் வெற்றி இன்று வீட்டிற்கு வந்து சக்தியை கூட்டிச் செல்வான் என்று அவள் காத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், வெற்றி சக்தியை அழைக்க வராமல் வெற்றி தன் வீட்டிற்கு போய் விடுகிறான். இதற்கடுத்து நிகழவிருப்பது என்ன? வாங்க பார்க்கலாம்.

Meenakshi Ponnunga

இனி நடக்கவிருப்பது..

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் குடித்துவிட்டு வந்த வெற்றிக்கு சக்தி ஊட்டி விடுகிறாள். ஆனால் அவன் சாப்பிடாமல் துப்பி விடுகிறான். சக்தி சென்றதும் அவன் சாப்பிடுகிறான். இதை மறைந்திருந்து பார்க்கும் சக்தி சிரித்து விட்டு செல்கிறாள். 

மேலும் படிக்க | சிவாவுக்கு செக் வைத்த நட்சத்திரா.. தீபாவை தூக்கிய ராஜூ - பரபர காட்சிகளுடன் கார்த்திகை தீபம் .!!

அதன் பிறகு வீட்டிற்கு வெளியே சரண்யா ரங்கநாயகியை பஞ்சாயத்துக்கு அழைக்கிறாள். ஊர்க்காரர்களும் அழைக்கிறார்கள். உன்னால் தான் இந்த பிரச்சனை என்று சக்தியை முறைத்துவிட்டு ரங்கநாயகி பஞ்சாயத்துக்கு புறப்படுகிறாள்.

பஞ்சாயத்து:

அசோக் குடும்பம் மற்றும் சக்தி என அனைவரும் பஞ்சாயத்துக்கு வருகிறார்கள்.
பஞ்சாயத்தில் அசோக்கின் அம்மா, சரண்யா வயிற்றில் வளர்வது அசோக்கின் குழந்தை இல்லை வெற்றி மிரட்டியதால் அசோக் அப்படி சொல்லுகிறான் என்று சொல்லி, சக்தியே கோவிலில் வைத்து சரண்யாவும் அசோக்கும் சந்திக்கவில்லை என்று தன்னிடம் சொன்னதாக சொல்கிறாள்.

Meenakshi Ponnunga

ஆனால் இப்போது சக்தி பொய் சொன்னதாக கூறுவது ஏற்க முடியாது, சக்திக்கு ரங்கநாயகி டி என் ஏ டெஸ்ட் எடுக்க சொன்னது போல சரண்யாவுக்கும் 
டி என்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்கிறாள். ரங்கநாயகி எல்லாம் சக்தியால் தான் என்பது போல் சக்தியை முறைக்க, வெற்றியும் சக்தியை கோபத்துடன் முறைத்து பார்க்கிறான். 

காணத்தவறாதீர்கள்..

சக்தி குறித்த உண்மை உலகிற்கு தெரிய வருமா? வெற்றியின் குடும்பம் டி.என்.ஏ டெஸ்டை மேற்கொள்வார்களா? போன்ற விறுவிறுப்பான திருப்பங்களுடன் தொடர உள்ளது மீனாட்சி பொண்ணுங்க தொடரின் கதை. இந்த நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Custody Twitter Review:"கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர்தான்..” கஸ்டடி படத்தின் ட்விட்டர் ரிவியூ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News