சூர்யா-வின் NGK திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏன்?

நடிகர் சூர்யா நடிப்பில் உறுவாகி வரும் NGK என்னும் நந்த கோபாலன் குமரன் திரைப்படம் குறித்து உரிய நேரத்தில் தகவல்கள் வெளியாகும், அதுவரை ரசிகர்கள் பொருமை காக்க வேண்டும் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்!

Last Updated : Nov 28, 2018, 05:43 PM IST
சூர்யா-வின் NGK திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏன்? title=

நடிகர் சூர்யா நடிப்பில் உறுவாகி வரும் NGK என்னும் நந்த கோபாலன் குமரன் திரைப்படம் குறித்து உரிய நேரத்தில் தகவல்கள் வெளியாகும், அதுவரை ரசிகர்கள் பொருமை காக்க வேண்டும் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்!

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் NGK. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க பெரும் எதிர்பார்புடன் உருவாகி வந்தது. ஆரம்பத்தில் இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடவுள்ளதா படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஆனால் படவேலைகளுக்கு இடையில் இயக்குநர் செல்வராகவன் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் NGK., தீபாவளி அன்று வெளியிடப்படாமல் தள்ளிப் போனது. இதையடுத்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் சூர்யா கவனம் செலுத்தத் தொடங்கினார்.

எனினும் NGK திரைப்படத்தினை எதிர்ப்பார்த்து வரும் செல்வராகவன் ரசிகர்கள் இந்தப் படம் குறித்த தகவல்களை வேண்டி இணையத்தில் படையெடுத்தனர். தொடர்ந்து படத்தின் இயக்குநர், தயாரிப்பாளரிடன் ரசிகர்கள் படத்தின் வெளியீடு குறித்து கேட்டு வரும் நிலையில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் இயக்குநர் செல்வராகவன், ட்விட்டர் பதிவு ஒன்று இட்டுள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

"எனது தாழ்மையான வேண்டுகோள்; படத்தின் வெளியீட்டிற்கா நாங்கள் கடுமையாக உழைத்து வருகின்றோம். விரைவில் வெளியாகும், அதேப்போல் படத்தின் அப்டேட்ஸ் உரிய நேரத்தில் வெளியிடப்படும். அதேவேலையில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை (அ) வாரம் ஒருமுறை படம் குறித்த தகவல்கள் வெளியிடுவதென்பது இயலாத காரியம் என்பதை ரசிகர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். எங்களுக்கு நீங்கள் பக்க பலமாக இருந்தால் எங்கள் இலக்கை நோக்கி இன்னும் கடுமையாக உழைக்கும் பலம் எங்களுக்குக் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Trending News