அமீர் - பாவனி இடையே கொளுத்தி போட்ட பிரியங்கா

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வந்திருக்கும் அமீர் - பாவனி இடையே பிரியங்கா கொளுத்தி போட்டது, இருவருக்கும் இடையே புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 8, 2022, 04:12 PM IST
  • பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் - பாவனி
  • ஜோடியாக நடனமாட உள்ளனர்
  • இருவருக்கும் இடையே கொளுத்தி போட்ட பிரியங்கா
அமீர் - பாவனி இடையே கொளுத்தி போட்ட பிரியங்கா title=

நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அமீர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் பிரியங்காவும் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். வைல்டு கார்டு என்டிரியாக வந்த அமீர் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பல சர்ச்சைகளில் சிக்கினாலும், பாவனி தன்னுடைய விடாப்பிடியான ஆட்டத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி 3வது இடத்தை பிடித்து அசத்தினார்.

அந்த வீட்டில் பல்வேறு டாஸ்குகளை செய்த போட்டியாளர்கள் இப்போது விஜய் டிவியில் ஜோடிகளாக அடுத்த போட்டிக்கு தயாராகிவிட்டனர். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள், இந்த போட்டியிலும் ஜோடியாக களம் கண்டுள்ளனர். அமீர், பாவனி, வேல்முருகன், ஆர்த்தி கணேஷ், அபிஷேக், ஸ்ருதி, சுஜா வருணி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சிக்கான புரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது. அதற்கு முன்னதாக முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியானது. பிரியங்கா தொகுத்து வழங்கிய அந்த வீடியோவில் தான், கொளுத்தியும் போட்டார். அதாவது, போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொண்டே வரும் பிரியங்கா, அபிஷேக், வேல்முருகன் உள்ளிட்டோரிடம் பேசுகிறார். அவர்களைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியே இவர்களுக்காக தான் ஆரம்பிக்கப்பட்டது என அமீர் மற்றும் பாவனியை அறிமுகம் செய்கிறார். அவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் ஜோடியாக ஆடுகின்றனர்.

அவர்களிடம் பேசும் பிரியங்கா, இந்த சீசன் முடிவதற்கு கல்யாணம் செஞ்சுக்குவீங்களா? என கேட்கிறார். அதற்கு பாவனி,’ராக்கி கட்ட இருப்பதாக குண்டை தூக்கி வீசுகிறார். அப்போது அமீரின் முகம் மாறிவிடுகிறது. பின்னர், பிரண்ட்ஷிப் பேண்ட் கட்டப்போவதாக பாவனி தெரிவிக்கிறார். இந்த இடத்தில் பிரியங்கா கொளுத்தி போட்டதால், அமீரின் முகம் சற்று வாடிப்போனது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நார்மல் நிலைக்கு வந்து, கலகலப்பாக உரையாடிக் கொண்டனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News