வல்லவனுக்கு பிறகு மீண்டும் சிம்பு இயக்கும் புதிய படம்!

'வல்லவன்' படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கி அதில் தானே கதாநாயகனாக நடிக்கப்போவதாக கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 13, 2022, 11:03 AM IST
  • வெந்து தணிந்தது காடு படம் இந்த வாரம் வெளியாக உள்ளது.
  • சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
  • தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.
வல்லவனுக்கு பிறகு மீண்டும் சிம்பு இயக்கும் புதிய படம்! title=

தமிழ் சினிமாவில் பன்முக திறமை வாய்ந்த நடிகர் தான் சிலம்பரசன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் நுழைந்த இவர் நடிப்பு மட்டுமல்லாது பாடுவது, பாடல் வரிகள் எழுதுவது, இயக்குவது போன்ற பல திறமைகளை கற்ற சகலகலா வல்லவராக திகழ்கிறார்.  இடைப்பட்ட காலத்தில் படங்கள் சரியாக ஓடாமல் இருந்து வந்த இவருக்கு மீண்டும் சிறந்ததொரு கம்பேக் கொடுக்கும் விதமாக அமைந்தது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'மாநாடு' படம்.  தனது பாடி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் மூலமாக அனைவரையும் அசர வைத்தார், இதனை தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் குவிந்து வந்தது.  தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படம் இந்த செப்டெம்பர் மாதம் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.  

சிம்பு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த படத்தில் சிம்பு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  இந்த  ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிம்பு பேசுகையில், தான் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த படத்திற்காக சில திரைக்கதைகளை தயாரித்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.  மேலும் வெளியாகியுள்ள சில தகவல்களின்படி, சிம்பு 10 கதைகளை தயார் செய்திருப்பதாகவும் அதில் ஒன்றை இன்னும் தேர்வு செய்யவில்லை என்றும், விரைவில் அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து தனது அடுத்த படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.  மேலும் புதிய படத்தை இயக்கப்போகும் நடிகர் சிம்பு அந்த படத்தில் தானே கதாநாயகனாகவும் நடிக்கப்போவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | அனுஷ்காவிற்கு பிடித்த சீரியல் நடிகை இவர்தானாம்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

சிம்பு படத்தை இயக்கப்போவது முதல்முறையல்ல, அவர் கடந்த 2006ம் ஆண்டு 'வல்லவன்' படத்தை இயக்கியதன் மூலமும் இயக்குனராக தனது புதிய பரிமாணத்தை வெளிக்காட்டினார்.  இந்த படத்தில் கதாநாயகனாக அவரே நடித்தும் இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் ரீமாசென் ஆகியோர் நடித்திருந்தனர்.  தற்போது சிம்பு, ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | ஜெயிலர் படத்தில் நான் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் ஹீரோயினின் பளிச் பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News